Wednesday, April 1, 2009

கடும் விலை உயர்வால் வாங்க ஆள் இல்லை : மார்ச் மாதத்தில் தங்கம் இறக்குமதி அறவே இல்லை

தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்தில் இருப்பதால் அதற்கான டிமாண்ட் வெகுவாக குறைந்து விட்டது. இதன் காரணமாக தொடர்ந்து இரண்டாவது மாதமாக, மார்ச் மாதத்திலும் தங்கத்தை நாம் இறக்குமதி செய்யவே இல்லை. தங்கத்தின் விலை தொடர்ந்து 10 கிராமுக்கு ரூ.15,000 என்ற அளவிலேயே இருந்து வருகிறது. இதனால் தங்க நகை கடைகளில் வழக்கமான கூட்டத்தை பார்க்க முடியவில்லை. தங்கத்திற்கு டிமாண்ட் இல்லாததால் மார்ச் மாதத்திலும் தங்கத்தை நாம் இறக்குமதி செய்யவே இல்லை. இரண்டாவது மாதமாக தங்கம் இறக்குமதி ஜீரோ வாக இருக்கிறது. தொடர்ந்து தங்கத்தின் விலை இதே போல் இருந்தால் நாம் தங்கத்தை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விடும் என்கிறார் பாம்பே புல்லியன் அசோசியேஷன் இயக்குனர் சுரேஷ் ஹூண்டியா. கடந்த 2008 ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நாம் 21 டன் தங்கத்தை இறக்குமதி செய்திருக்கிறோம். ஜனவரி - மார்ச் மாதத்தில் மொத்தம் 61 டன் தங்கத்தை இறக்குமதி செய்திருக்கிறோம்.ஆனால் இந்த வருடம் ஜனவரி - மார்ச் மாதத்தில் நாம் இறக்குமதி செய்திருக்கும் தங்கம் வெறும் 1.8 டன் மட்டுமே. தங்கம் வாங்க சிறந்த நாளாக கருதப்பட்டும் ' அக்ஷய திருதி ' வர இருப்பதால், அப்போது தங்கத்திற்கு டிமாண்ட் இருக்காதா என்று ஹூண்டியாவிடம் கேட்டபோது, எந்த முக்கிய நாள் வந்தாலும் விலை அதிகமாக இருந்தால் யாரும் வாங்கப்போவதில்லை. எல்லாம் விலையை அடிப்படையாகத்தான் இருக்கிறது என்றார்.

நன்றி :தினமலர்


No comments: