Wednesday, April 15, 2009

கடந்த மூன்று மாதங்களில் 5,000 பேரை புதிதாக வேலைக்கு சேர்த்திருக்கிறோம் : இன்போசிஸ்

பொருளாதார மந்த நிலை காரணமாக பெரும்பாலான சாப்ட்வேர் நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து வரும் வேளையில், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான இன்போசிஸ், கடந்த மூன்று மாதங்களில் 5,000 பேரை புதிதாக வேலையில் சேர்த்திருக்கிறது. 5,000 பேரை புதிதாக சேர்த்திருந்தாலும், அதன் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 1,772 பேர் மட்டுமே கூடியிருக்கிறார்கள் என்றும் மீதி பேர் போய் விட்டார்கள் அல்லது அனுப்பப்பட்டு விட்டார்கள் என்றும் இன்போசிஸ் சொல்லியிருக்கிறது. மார்ச் 31,2009 கணக்குப்படி, இன்போசிஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களில் மொத்தம் 1,04,850 ஊழியர்கள் பணியாற்று வதாக தெரிவித்திருக்கிறது. 2008 - 09 நிதி ஆண்டில் மொத்தமாக அது 28,231 ஊழியர்களை புதிதாக சேர்த்திருந்தாலும், வெளியே சென்றவர்கள் போக மீதி 13,663 பேர் அவர்களது ஊழியர்கள் லிஸ்ட்டில் சேர்ந்திருக்கிறார்கள். இன்போசிஸின் ஹெச்ஆர்டி மற்றும் எஜூகேஷன் அண்ட் ரிசர்ச் பிரிவின் தலைவர் மோகன்தாஸ் பை இதனை தெரிவித்துள்ளார்.

நன்றி : தினமலர்



No comments: