Friday, March 27, 2009

ரஷ்ய நிறுவனத்துடன் புது மொபைல் சேவை

ரஷ்ய பொதுத்துறை நிறுவனமும், இந்திய நிறுவனமும் இணைந்து, தமிழகத்தில் எம்.டி.எஸ்., எனும் புதிய மொபைல் சேவையை துவக்கியுள்ளன. இது குறித்து, சிஸ்டெமா ஷ்யாம் டெலி சர்வீசஸ் தலைமை செயல் அதிகாரி சீனிராவ் சாரிபள்ளி மற்றும் நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது: ரஷ்யாவின் சிஸ்டெமா பொதுத்துறை நிறுவனமும், இந்தியாவின் ஷ்யாம் குழுமமும் இணைந்து சிஸ்டெமா ஷ்யாம் டெலிசர்வீசஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றன. இந்த நிறுவனம் தமிழகத்தில் எம்.டி.எஸ்., என்ற புதிய மொபைல் போன் சேவையை துவங்கியுள்ளது. சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் இந்த சேவையை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த இரு மாதத்திற்குள் 580 நகரங்களில் சேவையை துவங்கவுள்ளோம். தற்போது 'பிரிபெய்டு' முறையில் சிம்கார்டு சேவையை அறிமுகம் செய்துள்ளோம். அறிமுகச் சலுகையாக 499 ரூபாய் செலுத்தி 'எம் கார்டு' திட்டத்தில் பிரிபெய்டு கார்டு பெற்றவர்கள், வாழ்நாள் முழுவதும் பத்து லட்சம் நிமிடங்கள் இலவசமாக பேச முடியும்.
இதன்படி, எம்.டி.எஸ்., மொபைல் இணைப்பிலிருந்து, மற்றொரு எம்.டி.எஸ்., இணைப்பிற்கு செய்யும் அழைப்புகளுக்கு நாள் ஒன்றுக்கு 150 நிமிடங்கள் இலவசமாக பேசிக் கொள்ளலாம். நாட்டில் உள்ள அனைத்து நெட்வொர்கிற்கு செல்லும் எஸ்.எம்.எஸ்.,களுக்கு நாளொன்றுக்கு 10 எஸ்.எம்.எஸ்.,களை இலவசமாக அனுப்பிக் கொள்ளலாம். 'எம்சேவர் 99' திட்டத்தில் சேர்ந்தால் எம்.டி.எஸ்., சேவையிலிருந்து எம்.டி.எஸ்., மொபைல் சேவைக்கு செய்யும் அனைத்து லோக்கல் கால்களும் இலவசமாகும். 'எம்சேவர் 30' திட்டத்தில் இணைப்பு பெற்றால் முதல் 2 எஸ்.எம்.எஸ்.,களுக்கு பின் செய்யும் அனைத்து எஸ்.எம்.எஸ்.,களும் இலவசம். எம்.டி.எஸ்., மொபைல் சேவை எண்கள் 91500 என்ற சீரியலில் இருந்து துவங்கும். ஒரு மொபைல் சேவையில் இருந்து மற்றொரு மொபைல் சேவைக்கு மாறும் போது பழைய எண்ணையே தொடரும் வகையில் அரசு மாற்றங்களை கொண்டுவரவுள்ளது. முதல்கட்டமாக நான்கு மெட்ரோ நகரங்களில் இந்தச் சேவை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதிகாரி சீனிராவ் கூறினார்.

நன்றி : தினமலர்


No comments: