Tuesday, March 17, 2009

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தது டெல்ஸ்ட்ரா

ஆஸ்திரேலிய டெலிகாம் நிறுவனமான டெல்ஸ்ட்ரா, அதன் அவுட்சோர்ஸிங் பார்ட்னரான சத்யம் கம்ப்யூட்டர்ஸூடனான தொடர்பை துண்டித்துக்கொண்டது. சத்யம் கம்ப்யூட்டர்ஸூடன் ஆஸ்திரேலிய டெலிகாம் நிறுவனமான டெல்ஸ்ட்ரா, அப்ளிகேஷன் சப்போர்ட் சம்பந்தமான ஒப்பந்தத்தை செய்திருந்தது. இது வருடத்திற்கு 32 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் ( சுமார் 110 கோடி ரூபாய் ) மதிப்புள்ள ஆர்டர். சத்யத்துடன் செய்திருந்த ஒப்பத்தம் இப்போது இடிஎஸ் நிறுவனத்திற்கு சென்று விட்டதாக ' த ஆஸ்திரேலியன் ' என்ற செய்தி பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருக்கிறது. டெல்ஸ்ட்ராவுடனான ஒப்பந்தம் முறிந்து விடாமல் பார்த்துக்கொள்வதற்காக, சத்யம் கம்ப்யூட்டர்ஸின் புதிய தலைவர் ஏ.எஸ்.மூர்த்தி கடந்த வாரத்தில் ஆஸ்திரேலியா சென்று வந்தார் என்றும் சொல்லப்படுகிறது. சத்யத்தில் நிதி மோசடி நடந்ததை அடுத்து டெல்ஸ்ட்ரா நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
நன்றி : தினமலர்


No comments: