Tuesday, March 17, 2009

கிரிடிட் கார்டு உபயோகம் 8 சதவீதம் குறைந்திருக்கிறது

இந்தியாவில் கிரிடிட் கார்டை பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்திருப்பதோடு, அதன் மூலம் செலவு செய்வதும் குறைந்திருக்கிறது. ஏப்ரல் 2008 ல் கிரிடிட் கார்டு மூலமாக ரூ.5,611.38 கோடி செலவு செய்யப்பட்டிருந்தது. அதுவே ஜனவரி 2009ல் 7.85 சதவீதம் குறைந்து ரூ.5,171.06 கோடியாகி விட்டது. மேலும் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின் படி, கடந்த வருடத்தில் கிரிடிட் கார்டு வைத்திருப்பவர்கள் கட்டாத தொகையும் 70 சதவீதம் அதிகரித்திருக்கிறது. டிசம்பர் 2007ல் ரூ.17,306 கோடியாக இருந்த கிரிடிட் கார்டு கடன் தொகை, டிசம்பர் 2008 ல் ரூ.29,359 கோடியாக அதிகரித்திருக்கிறது. கிரிடிட் கார்டு மூலமாக செலவு செய்வது குறைந்திருப்பதற்கு முக்கிய காரணம் பொருளாதார சரிவுதான் என்றும், இப்போதிருக்கும் நிலையில் தேவையில்லாத செலவுகளை மக்கள் குறைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார் ஒரு வங்கி அதிகாரி. பொதுவாகவே மக்களின் செலவு செய்யும் போக்கு குறைந்திருக்கிறது என்கிறார் ஆக்ஸிஸ் பேங்க் சீனியர் வைஸ் பிரசிடென்ட் ( ரீடெய்ல் பேங்கிங் ) சுஜன் சின்ஹா. வங்கிகளும் கிரிடிட் கார்டு வினியோகம் செய்வதை குறைத்துக்கொண்டிருக்கின்றன என்கிறார் அவர்.
நன்றி : தினமலர்


No comments: