Thursday, March 19, 2009

டிஎஸ்பி மெரில் லிஞ்சின் 10 சதவீத பங்குகளை விற்றார் ஹேமந்த்ரா கோத்தாரி

டிஎஸ்பி மெரில் லிஞ்ச் நிறுவனத்தில் இருந்த 10 சதவீத பங்குகளை விற்று விட்டார் அதன் சேர்மன் ஹேமந்த்ரா கோத்தாரி. நிண்ட காலமாகவே நான் இதை விற்று விட தீர்மானித்திருந்தேன். இப்போது விற்று விட்டேன் என்றார் ஹேமந்த்ரா கோத்தாரி. இவருக்கு அந்த நிறுவனத்தில் இருந்த பங்குகளில் 48 சதவீத பங்குகளை ஏற்கனவே கடந்த 2006 ம் வருடம் அவர் டிஎஸ்பி மெரில் லிஞ்ச் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெரில் லிஞ்ச்க்கு விற்று விட்டார். இப்பேது மீதி இருந்த 10 சதவீதத்தையும் விற்றிருக்கிறார். எனவே இதன் மூலம் டி எஸ் பி மெரில் லிஞ்ச் நிறுவனம் முழுவதும் அதன் தாய் நிறுவனமான மெரில் லிஞ்ச் இடம் சென்று விட்டது. அதாவது மெரில் லிஞ்ச் நிறுவனத்தை சமீபத்தில் வாங்கிய பேங்க் ஆஃப் அமெரிக்காவிடம் சென்று விட்டது. மார்ச் 31ம் தேதியுடன் டிஎஸ்பி மெரில் லிஞ்ச்சில் இருந்து ஹேமந்த்ரா கோத்தாரி ஓய்வு பெற்று விட்டாலும், தொடர்ந்து நான் - எக்ஸிகூடிவ் சேர்மனாக டிஎஸ்பி மெரில் லிஞ்ச்சின் அசட் மேனேஜ்மென்ட் நிறுவனமான டிஎஸ்பி பிளாக்ராக் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கோத்தாரியில் பங்குகள் விற்கப்பட்டு விட்டதால் அதில் பணிபுரிந்து வரும் 450 ஊழியர்களுக்கு எந்த வித பாதிப்பும் வராது என்று சொல்லப்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: