Tuesday, February 17, 2009

புதுச்சேரி விமான நிலையம் செயல்பட இன்னும் ஒரு வருடம் ஆகும் : குர்ஜார்

இந்த வருடம் மார்ச் மாதம் செயல்படுவதாக இருந்த புதுச்சேரி விமான நிலையம், செயல்பட இன்னும் ஒரு வருடம் ஆகலாம் என்று புதுச்சேரி லெப்டினன்ட் கவர்னர் கோவிந்த சிங் குர்ஜார் தெரிவித்தார். தற்போது கட்டப்பட்டு வரும் புதுச்சேரி விமான நிலையம், முன்பு போடப்பட்ட திட்டப்படி, வரும் மார்ச் மாதத்தில் இருந்து செயல்பட வேண்டும். ஆனால் அங்கு வேலைகள் இன்னும் முடிவடையாமல் இருப்பதால் திறப்பு விழாவுக்கு இன்னும் ஒரு வருடம் ஆகலாம் என்று அவர் தெரிவித்தார். எதிர்பார்த்தபடி அங்கு வேலைகள் முடியாமல் இருக்கிறது என்றார் அவர். ரன்வேயை ஒட்டி கட்டப்பட்டிருக்கும் பாதாள சாக்கடையில் கசிவு ஏற்பட்டு, அது வெளியில் வருவதால் அதனை சரி செய்ய வேண்டியிருக்கிறது என்று சொன்ன அவர், புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானங்களை இயக்க கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் ஆர்வமாக இருக்கிறது என்றார்.
நன்றி : தினமலர்


1 comment:

Anonymous said...

Hi

உங்கள் வலைப்பதிவ வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி.

உங்கள் இணைப்பை இப்பூக்களில் பார்க்கவும்.

வேகமாக வளர்ந்து வரும தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.


நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்