Wednesday, November 5, 2008

இந்தியாவில் சிமென்டிற்கான டிமாண்ட் குறைந்தது

அக்டோபர் மாதத்தில் சிமென்டிற்கான டிமாண்ட் குறைந்திருக்கிறது. இதனால் பெரும்பாலான சிமென்ட் கம்பெனிகள் உற்பத்தியை குறைத்திருக்கின்றன. இது, இந்தியாவில் உற்பத்தி துறையில் சரிவு ஏற்பட்டு வருவதை காட்டுவதாக சொல்லப்படுகிறது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் 1.51 மில்லியன் டன் சிமென்ட் உற்பத்தி செய்திருந்த ஹோல்சியம் குரூப் கம்பெனியை சேர்ந்த அம்புஜா சிமென்ட்ஸ், இந்த வருடம் அக்டோபரில் 1.45 மில்லியன் டன் சிமென்ட் தான் உற்பத்தி செய்திருக்கிறது. அதன் சப்ளையும் குறைந்திருக்கிறது. ஹோல்சியம் குரூப்பை சேர்ந்த இன்னொரு பிரபல சிமென்ட் கம்பெனியான ஏ.சி.சி., யின் உற்பத்தியும் 1.13 சதவீதம் குறைந்திருக்கிறது. கடந்த அக்டோபரில் 1.76 மில்லியன் டன்களாக இருந்த சிமென்ட் உற்பத்தி, இந்த அக்டோபரில் 1.74 மில்லியன் டன்களாக குறைந்திருக்கிறது. சப்ளையும் 3.4 சதவீதம் குறைந்து, 1.75 மில்லியன் டன்களில் இருந்து 1.70 மில்லியன் டன்களாகி இருக்கிறது. ஆனால் இன்னொரு பிரபல சிமென்ட் கம்பெனியான ஆதித்ய பிர்லா குரூப்பை சேர்ந்த கிராஸிம் இன்டஸ்டிரீஸ் மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட்ஸ், 1.93 சதவீத வளர்ச்சியை கண்டிருக்கிறது. இந்தியாவில் சிமென்ட் துறையில் 55 சதவீத மார்க்கெட் ஷேர், ஹோல்சியம் குரூப் மற்றும் பிர்லா குரூப் கம்பெனிகளிடம் தான் இருக்கிறது.
நன்றி தினமலர்


No comments: