Wednesday, November 5, 2008

கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதற்கு காரணம், பாரக் ஒபாமா அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் அல்ல. சவுதி அரேபியா, எண்ணெய் ஏற்றுமதியின் அளவை குறைத்திருப்பதுதான் காரணம் என்கிறார்கள்.லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை, கடந்த 20 மாதங்களில் இல்லாத அளவாக நேற்று பேரலுக்கு 5.43 டாலர் உயர்ந்து 65.91 டாலராகி விட்டது. அமெரிக்காவின் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை 69.88 டாலராக உயர்ந்து விட்டது. உலகில் அதிகம் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடான சவுதி அரேபியா, அது ஏற்றுமதி செய்யும் எண்ணெய்யின் அளவில், நாள் ஒன்றுக்கு 9,00,000 பேரல்களை குறைத்திருக்கிறது. யூரோவுக்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்திருப்பதும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததற்கு காரணம் என்கிறார்கள். கடந்த மாதம் கூடிய ஓபக் மாநாட்டில், நாள் ஒன்றுக்கு 15 லட்சம் பேரல்கள் உற்பத்தியை குறைக்க வேண்டும் என்று உறுப்பு நாடுகளை அது கேட்டுக்கொண்டது. அது எப்போதிருந்து முழுமையாக அமல்படுத்தப்படும் என்று தெரியவில்லை. இருந்தாலும் கடந்த ஜூலை மாதத்தில் பேரலுக்கு 147 டாலர் வரை உயர்ந்திருந்த கச்சா எண்ணெய் விலை அதன் பின் மளமளவென குறைய துவங்கி, 60 டாலர்களை ஒட்டி வந்திருந்தது. இப்போது கொஞ்சம் உயர்ந்திருக்கிறது.
நன்றி : தினமலர்

No comments: