Thursday, November 27, 2008

கட்டணத்தை குறைத்து விமான நிறுவனங்கள் அதிரடி

விமான டிக்கெட்டுகள் மீதான பரிவர்த்தனை கட்டணம் வாபஸ் பெறப்பட்டுள்ளதால், விமானக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. விமான டிக்கெட் புக்கிங் அலுவலகங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் டிக்கெட்டுகளின் மீதான பரிவர்த்தனை கட்டணத்தை ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ், கிங் பிஷர் ஆகிய நிறுவனங்கள் வாபஸ் பெற்றுள்ளன. உள்ளூர் எகனாமி டிக்கெட்டுகளின் பரிவர்த்தனை கட்டணம் 300 ரூபாய் வரையிலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான டிக்கெட்டுகளின் பரிவர்த்தனை கட்டணம் 1,200 முதல் 10 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டது. தற்போது இந்த கட்டணம் வாபஸ் பெறப்பட்டுள்ளதால், விமானக் கட்டணம் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. விமான எரிபொருளின் விலை குறைந்துள்ளதால், விமானக் கட்டணத்தைக் குறைக்கும் படி, மத்திய விமானத்துறை அமைச்சர் பிரபுல் படேல், விமான நிறுவனங்களை அறிவுறுத்தியிருந்தார். இதைத் தொடர்ந்து பரிவர்த்தனை கட்டணம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மற்ற விமான நிறுவனங்களும் விரைவில் விமான டிக்கெட் பரிவர்த்தனை கட்டணத்தை வாபஸ் பெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.
நன்றி : தினமலர்


No comments: