Thursday, November 27, 2008

பொது சேமநல நிதி: வங்கிகள் புறக்கணிப்பு

அரசு நிர்வகித்து வரும் பொது சேமநல நிதியில், தேசிய வங்கிகளில் முதலீடு செய்யும் போது, கூடுதல் சுமையை, தவிர்ப்பதற்காக சேமிப்பு கணக்கு ஒன்றையும் துவக்கும் படி வற்புறுத்தப்படு கிறது. இது சட்டவிரோதம் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. பொது சேமநல நிதி கணக்கு துவக்குவோரிடம், தனியாக சேமிப்பு கணக்கையும் துவக்கும் படி வலியுறுத்துகின்றனர். ஆனால், இது சட்ட விரோதம் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. பொது சேமநல நிதி துவக்குவோரிடம், சேமிப்பு கணக்கும் துவக்க நிர்பந்தித்தால், இது குறித்து, வங்கியின் தலைமை அதிகாரியிடம் புகார் மனு அளிக்கலாம். அதன் பிறகும், பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால், ரிசர்வ் வங்கி நியமித்துள்ள வங்கிகள் மத்தியஸ்த அமைப்பிடம் முறையிடலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


No comments: