Monday, November 17, 2008

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் பங்குகளை வாங்க வெளிநாட்டு நிறுவனங்கள் முயற்சி

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்க பல வெளிநாட்டு விமான கம்பெனிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன என்று, அதன் சேர்மன் விஜய் மல்லையா இன்று தெரிவித்தார். ஆனால் இப்போதைய கொள்கையில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்து, வெளிநாட்டு நிறுவனங்களும் நம்நாட்டு விமான கம்பெனிகளின் பங்குகளை வாங்க வழி ஏற்படுத்தினால்தான் அவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்க முடியும் என்றார். இதற்கு மேல் நான் எதுவும் விவரமாக சொல்ல முடியாது என்று மல்லையா மறுத்தாலும், பங்குகளை விற்பது குறித்து வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்துகொண்டுதான் இருக்கிறது என்று கிங்ஃபிஷர் அதிகாரிகள் தெரிவித்தனர். இப்போதுள்ள அரசின் கொள்கையின் படி எந்த ஒரு வெளிநாட்டு நிறுவனமும் இந்திய விமான கம்பெனிகளின் பங்குகளை வாங்க முடியாது. ஆனால் விமான சேவையுடன் தொடர்புடைய மற்ற வேலைகளை, அதாவது கிரீன்ஃபீல்ட் விமான நிலையங்கள் அமைப்பது, கார்கோ அல்லது பராமரிப்பு வேலைகளை செய்வது, விமானங்களை ரிப்போர் பார்ப்பது அல்லது சர்வீஸ் செய்வது போன்ற வேலைகளில் 100 சதவீதம் வெளிநாட்ட நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இந்திய விமான நிறுவனங்களுக்கு அதிகம் சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் விஜய் மல்லையா, இந்திய விமான நிறுவனங்கங்களின் பங்குகளில், நான்கின் ஒரு பங்கையாவது ( 25 சதவீதம் ) வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்க அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதில் மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார். ஆனால் சமீபத்தில் இது குறித்து பேசிய கேபினட் செகரட்டரி கே.எம்.சந்திரசேகர், இந்திய விமான போக்குவரத்து துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிப்பது என்பது இப்போதைக்கு இல்லை என்றே குறிப்பிட்டார்.

நன்றிதினமலர்



No comments: