Friday, November 14, 2008

சுமார் 500 கிளைகளின் வேலை நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க ஐசிஐசிஐ வங்கி திட்டம்

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி, சுமார் 500 கிளைகளில் வேலை நேரத்தை 12 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரமாக குறைக்க திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம் வேலைத்திறனை அதிகரிக்க அந்த வங்கி முடிவெடுத்திருக்கிறது. இப்போது காலை 8 மணியில் இருந்து இரவு 8 மணி வரை என்றிருக்கும் வேலை நேரத்தை டிசம்பர் ஓன்றாம் தேதியில் இருந்து காலை 9 மணியில் இருந்து மாலை 6 மணி வரை என்று மாற்ற இருக்கிறார்கள். இந்தியாவில் அவர்களுக்கு 1,450 கிளைகள் இருக்கின்றன. அதில் சுமார் 500 கிளைகளில் 9 டு 6 என்று வேலை நேரத்தை மாற்றப்போகிறார்கள். நாங்கள் எங்களது வாடிக்கையாளர்களின் வருகையை கடந்த இரண்டு ஆண்டுகளாக கவனித்து வந்தோம். அதில் கொஞ்சம் வாடிக்கையாளர்கள் காலை 9 இலிருந்து மாலை 6 க்குள்ளும், கொஞ்சம் பேர் காலை 10 இலிருந்து மாலை 6 க்குள்ளும் வருவது தெரிந்தது. மாலை 6 மணிக்கு மேல் வங்கி சேவையை பயன்படுத்துபவர்கள் மிக சிலரே என்று தெரிய வந்தது.இதனால் முதல் கட்டமாக கொஞ்சம் கிளைகளில் மட்டும் வேலை நேரத்தை 9 டு 6 என்று மாற்ற இருக்கிறோம் என்று ஐசிஐசிஐ வங்கியில் மனித மேம்பாட்டு துறை தலைவர் ராம்குமார் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


No comments: