Friday, November 14, 2008

ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாண்ட் 3,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்கிறது

ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாண்ட் ( ஆர் பி எஸ் ) அதன் 3,000 ஊழியர்களை இன்னும் சில வாரங்களில் வேலை நீக்கம் செய்கிறது. உலக அளவில் இருக்கும் அதன் வங்கி சேவையில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து, அது இந்த நடவடிக்கையை எடுக்கிறது. இருந்தாலும் அதன் முக்கிய பணிகள் ஏதுவும் பாதிக்கப்படாது என்று அந்த வங்கி தெரிவித்திருக்கிறது. கடந்த வருடத்தில் முதல் முறையாக நஷ்டத்தை சந்தித்த அந்த வங்கி, பிரிட்டிஷ் அரசிடமிருந்து 20 பில்லியன் பவுண்டுகளை கடனாக கேட்கிறது. உலகெங்கிலும் இருக்கும் அதன் கிளைகளில் மொத்தம் 1,70,000 பேர் பணியாற்றுகிறார்கள். அதில் 1,00,000 பேர் பிரிட்டனிலேயே பணியாற்றுகிறார்கள். பிரிட்டனின் பிரபல டெலிகாம் நிறுவனமான பி.டி.,10,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்வதாக அறிவித்த 24 மணி நேரத்தில் பேங்க் ஆஃப் ஸ்காட்லாண்டில் இருந்து இந்த அறிவிப்பு வந்திருக்கிறது. இவர்கள் தவிர விர்ஜின் மீடியா, யெல், கிளாஸ்கோ ஸ்மித்லைன், மற்றும் ஜேசிபி அகியோரும் மொத்தமாக 5,000 பேரை வேலை நீக்கம் செய்திருக்கிறார்கள். இதனால் பிரிட்டனில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை, கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவாக 1.82 மில்லியனாக உயர்ந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


1 comment:

எட்வின் said...

ஆஹா அங்கயுமா?
இதுல சச்சின் வேற இவங்க விளம்பரத்தில வராரே!!!