Thursday, October 23, 2008

பங்கு சந்தையில் மீண்டும் பெரும் வீழ்ச்சி

மும்பை பங்கு சந்தை இன்று மீண்டும் பெரும் சரிவை சந்திருக்கிறது. ஜூலை 24, 2006 க்குப்பிறகு, இன்று நிப்டி 3000 புள்ளிகளுக்கும் கீழே சென்றிருக்கிறது. சென்செக்ஸ் மீண்டும் 10000 புள்ளிகளுக்கும் கீழே சென்றுவிட்டது. கடந்த வரம் ஒரு தடவை இது 10 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழே போயிருந்தது. பின்னர் மேலே எழுந்து வந்து இன்று மீண்டும் கீழே போய் விட்டது. எஃப் ஐ ஐ களின் ஷார்ட் செல்லிங் முறைக்கு தடை விதிப்பது குறித்து நிதி அமைச்சர் வெளியிட்ட அறிக்கை ஒன்றும் பிரயோஜனமாக இருக்கவில்லை.உலக அளவில் சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் மெட்டல் நிறுவன பங்குகளின் கடும் சரிவு ஆகியவையே இன்றைய வீழ்ச்சிக்கு காரணம் என்கிறார்கள். நிதி அமைச்சரின் அறிவிப்பால் ஒரளவு சந்தை மீண்டு வந்தாலும் பெரிதாக மீழ முடியவில்லை. மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 398.20 புள்ளிகள் ( 3.92 சதவீதம் ) குறைந்து 9,771.70 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. நிப்டி 122.00 புள்ளிகள் ( 3.98 சதவீதம் ) குறைந்து 2,943.15 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டது ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ரிலையன்ஸ் பெட்ரோலியம், பார்தி ஏர்டெல், செய்ல், எஸ்.பி.ஐ., ஹெச்.டி.எஃப்.சி., ஐசிஐசிஐ பேங்க், டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ், டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹிண்டல்கோ ஆகிய நிறுவனங்கள்தான்.
நன்றி : தினமலர்


No comments: