Saturday, August 30, 2008

லேண்ட்ரோவர் கார் உற்பத்தி குறைக்கப்பட்டது

சமீபத்தில் டாடா கைக்கு வந்த பிரிட்டிஷ் கார் கம்பெனி லேண்ட் ரோவரில் கார் தயாரிப்பு குறைக்கப்பட்டது. உலக அளவில் பொருளாதாரத்தல் ஏற்பட்ட மந்த நிலை காரணமாக, விற்பனையில் சரிவு ஏற்பட்டதால், இனிமேல் அங்கு வாரத்தில் ஒரு நாள் உற்பத்தி நிறுத்தப்படுகிறது. இதுவரை வாரத்திற்கு ஐந்து நாட்கள் வேலை நாட்களாக இருந்த அங்கு, இனிமேல் நான்கு நாட்கள் தான் வேலை நாட்களாக இருக்கும். அதாவது திங்கட்கிழமையில் இருந்து வியாழன் வரை தான் இனிமேல் அங்கு தயாரிப்பு நடக்கும். இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வருகிறது. மேலும் அக்டோபரில் இருந்து இரவு ஷிப்டும் கேன்சல் செய்யப்படுகிறது. அமெரிக்காவின் ஃபோர்டு மோட்டார் கம்பெனியிடம் இருந்த ஜாகுவார், லேண்ட்ரோவர் கார் கம்பெனிகள் கடந்த ஜூலை மாதம்தான் இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் கைக்கு வந்தது. 1.7 பில்லியன் பவுண்டுக்கு ( சுமார் 13,600 கோடி ரூபாய் ) இந்த நிறுவனம் டாடாவால் வாங்கப்பட்டது. ஆனால் இந்த தயாரிப்பு குறைப்பால் அதன் வருடாந்திர தயாரிப்பு அளவில் ஒரு சதவீதம்தான் குறையும் என்று சொல்கிறார்கள். சீனா, ரஷ்யா, பிரேசில், ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு நாடுகள்,வட ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் இப்போதும் கூட லேண்ட் ரோவர், ஜாகுவார் கார்கள் நன்கு விற்பனை ஆகத்தான் செய்கிறது.
நன்றி : தினமலர்


1 comment:

david santos said...

Great!!!
Congratulations.