Saturday, August 9, 2008

சிமென்ட் விலை குறையுமா?வாய்ப்பே இல்லை


வட மாநிலங்களில் சிமென்ட் விலை குறைந்துள்ளது. ஆனால், தென் மாநிலங்களில் இப்போதைக்கு குறைய வாய்ப்பில்லை.தமிழகம் உட்பட, பல மாநிலங் களில் ரியல் எஸ்டேட் வர்த்தகம் பல மடங்கு பெருகி விட்டது. வானளாவ கட்டடங்கள் கட்டும் திட்டங்கள் பல மாநிலங்களில் நிறைவேற்றப் பட்ட வண்ணம் உள்ளன. அரசு, தனியார் வர்த்தக கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. தென் மாநிலங்களை ஒப்பிட்டால், வட மாநிலங்களில் சிமென்ட் உற்பத்தி பெருக்கத்துக்கு ஏற்ப அதன் தேவை அதிகரிக்கவில்லை. அம்புஜா சிமென்ட் நிறுவன நிர்வாக இயக்குனர் கபூர் கூறுகையில்,'சிமென்ட் விலை இன்னும் ஓராண்டில் 50 கிலோ மூட்டை 10 ரூபாய் குறையும் என்று எதிர் பார்க் கப்படுகிறது. வட மாநிலங்களில் அதிக அளவில் சிமென்ட் இருப்பு உள்ளது. வரும் மாதங்களில் உற்பத்தி இன்னும் அதிகமாக இருக்கும் என்பதால், இருப்பு அதிகமாகி, மொத்த லாபம் குறையும் என்று எண்ணுவதால் விலை குறைய வாய்ப்பு உள்ளது' என்றார்.'சிமென்ட் உற்பத்தியாளர்களுக்கு அதிக லாபம் கிடைத்து வந்த காலம் போய்விடும். அந்த அளவுக்கு நிலைமை மாறி வருகிறது. வட இந்தியாவில், தேவை குறைந்து போய், அதிக அளவில் சிமென்ட் கிடைக்கும் நிலை உருவாகும்' என்றும் அவர் தெரிவித்தார். குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களில் இப்போதே சிமென்ட் விலையை உற்பத்தியாளர்கள் குறைத்துவிட்டனர்.இந்தாண்டு முதல் அரையாண்டில் இரண்டு கோடி டன் அதிக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஆண்டுக்கு 21 கோடி டன் சிமென்ட் உற்பத்தி இருக்கும். அடுத்த ஆண்டில், உற்பத்தி 26 கோடி டன்னை எட்டி விடும். இது தேவைக்கு அதிகமான அளவு என்பதால், விலையை குறைக்காமல் விற்பனை செய்ய வாய்பப்பில்லை என்றும் உற்பத்தியாளர்கள் தரப்பில் கருத்து நிலவுகிறது.
நன்றி : தினமலர்


No comments: