Thursday, August 7, 2008

இனிமேல் இருசக்கர வாகன கடன் கிடையாது : ஐ சி ஐ சி ஐ வங்கி முடிவு


இதுவரை இருசக்கர வாகனங்களுக்கு கடன்கொடுத்து வந்த இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐ சி ஐ சி ஐ வங்கி, இப்போது அந்த தொழிலில் இருந்து விலகி விட்டது. இருசக்கர வாகன டீலர்களின் இருப்பிடத்திலேயே ஒரு ஸ்டால் அமைத்து இருந்துகொண்டு, ஐ சி ஐ சி ஐ வங்கி ஊழியர்கள் இதுவரை வாகன கடன் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். சமீப காலமாக வங்கிகள், அவர்களது நிர்வாக செலவை குறைத்துக்கொண்டு வருகின்றன. அதனடிப்படையில் முதலில் சிட்டிபேங்க், வாகன கடன் தொழிலில் இருந்து விலகியது. இப்போது அதற்கு அடுத்ததாக ஐ சி ஐ சி ஐ வங்கியும் விலகுகிறது. இவர்களும் நிர்வாக செலவு அதிகரித்து விட்டது என்றும் அதனை குறைக்கவே இந்த தொழிலில் இருந்து விலகுவதாக சொல்கிறார்கள். டீலர்களின் இருப்பிடத்தில் இருந்து இதுசம்பதமான வேலைகளை பார்த்து வந்த ஐ சி ஐ சி ஐ வங்கி ஊழியர்களை திரும்பி வந்து விடுமாறு அந்த வங்கி சொல்லிவிட்டது. இது குறித்து ஐ சி ஐ சி ஐ வங்கியில் விசாரித்தபோது, நாங்கள் வாகன கடன் தொழிலில் இருந்து முழுவதுமாக விலகி விடவில்லை. எங்களது கடன் திட்டத்தை சிறிது மாற்றி அமைக்கப்போகிறோம். அதன் பின்பு வேறு முறையில் வாகன கடன் கொடுக்க வந்து விடுவோம் என்றனர்.
நன்றி : தினமலர்


No comments: