Thursday, August 7, 2008

லேசான முன்னேற்றத்துடன் முடிந்த பங்கு சந்தை

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே அதிக மாற்றம் ஏதும் இல்லாமல் மந்தமாகவே இருந்தது. மதியத்திற்கு மேல் சென்செக்ஸ் 200 புள்ளிகள் வரை உயர்ந்திருந்தாலும் மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 43.71 புள்ளிகள் மட்டுமே ( 0.29 சதவீதம் ) உயர்ந்து 15,117.25 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையிலும் நிப்டி 6.30 புள்ளிகள் மட்டும் ( 0.14 சதவீதம் ) உயர்ந்து 4,513.85 புள்ளிகளில் முடிந்தது. பணவீக்க விகிதம் இன்று அறிவிக்கப்பட இருப்பதாலும் பங்கு சந்தையில் பெரிய மாற்றம் ஏதும் நிகழவில்லை என்கிறார்கள். சிஎன்பிசி - டிவி18 எடுத்த கணிப்பில், பணவீக்கம் 12.01 சதவீதமாக இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது அதற்கு முந்தைய வாரத்தை விட 0.03 சதவீதம் அதிகம்.
நன்றி : தினமலர்

No comments: