Tuesday, August 5, 2008

இளைஞர்களிடையே பெருகி வரும் யூஸ் அண்ட் த்ரோ செல்போன் மோகம்


பெரிய சைஸ் ஸ்கிரீன், அதிக சத்தம், ஏராளமான வசதிகள், கவர்ச்சியான மாடல்; ஆனால் மிக குறைந்த விலை. கொஞ்ச காலம் தான் வேலை செய்யும். இருந்தாலும் பரவாயில்லை என்று இப்போது அம்மாதிரி யூஸ் அண்ட் த்ரோ மாடல் செல்போன்கள்தான் இப்போது இளைஞர்களிடையே அதிக அளவில் விற்பனை ஆவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து வரும் இந்த வகை மாடல் சென்போன்கள் ரூ.2,500 லிருந்து ரூ.6,000 க்குள் விலையில் கிடைக்கிறது. சிக்மாடெல் - டி33, பானாசோனியோ, ஐபோன் - என்380,ஓய்எக்ஸ் டெல் - இ51, இசட் டி சி டி58, சி இ சி டி - கே698 போன்ற மாடல்களில் வரும் இந்த போன்களுக்குத்தான் இப்போது இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாக சென்னை ரிச்சி தெருவில் கடை வைத்திருக்கும் ஒருவர் தெரிவிக்கிறார். அவர் இம்மாதிரி மாடல்களை மாதத்திற்கு 25 முதல் 30 வரை விற்கிறாராம். ரூ.6500க்கே டூயல் சிம்கார்டு, பெரிய திரை, ரேடியோ, அதிக சத்தம், ஜி பி ஆர் எஸ், புளுடூத் வசதி கிடைப்பதால் எல்லோரும் இதையேதான் விரும்புகிறார்கள் என்கிறார் அவர். இதே வசதியுடன் கூடிய பிராண்டட் செல்போன் வாங்கப் போனால் அதற்கு அதிக அளவில் பணம் கொடுக்க வேண்டும்.எனவே கொஞ்ச காலம் மட்டுமே வேலை செய்தாலும் குறைந்த விலையில் கிடைக்கும் இந்த வகை செல்போன்களைத்தான் சென்னை இளைஞர்கள் அதிகம் விரும்புகிறார்கள் என்கிறார் அவர்.

நன்றி : தினமணி


6 comments:

முரளிகண்ணன் said...

it is quite natural

பாரதி said...

முரளிகண்ணன் வருகைக்கு நன்றி

குரங்கு said...

எல்லரும் குறைந்த விலையுள்ள பொருளையே விரும்புவார்

பாரதி said...

குரங்கு வருகைக்கு நன்றி

ilavanji said...

இந்த சைட்ல இருக்கற மாடல்கள் அத்தனையும் பர்மா பஜார்லயும் ரிச்சி ஸ்ட்ரீட்ட்லயும் கிடைக்கும் :)

http://www.solomobi.com

Subash said...

இங்கேயும் (இலங்கை)அப்ப்டிதாங்கோ