Tuesday, August 5, 2008

ஆப்ரிக்காவுக்கு அரிசி ஏற்றுமதி செய்ய அரசு அனுமதிக்கலாம்


கடும் உணவு பற்றாக்குறையால் சீரழிந்து போய் இருக்கும் ஆப்ரிக்க நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்தியாவில் உணவுப்பொருட்களில் விலை உயர்ந்து வருவதை கட்டுப்படுத்தவும், இரட்டை இலக்கத்தில் இருக்கும் பணவீக்கத்தை குறைக்கவேண்டும் என்பதற்காகவும் இந்திய அரசு பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் தடை விதித்தது. ஆனால் உணவுப்பொருட்களின் விலை, உலக நாடுகள் அனைத்திலும் உயர்ந்துள்ளதால் பல ஆப்ரிக்க நாடுகள் போதுமான உணவு கிடைக்காமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதை கருத்தில் கொண்டும், நவம்பர் மாதத்தில் இந்தியாவில் அரிசி அறுவடை செய்யப்பட இருப்பதாலும் நவம்பருக்குப்பின் ஆப்ரிக்க நாடுகளுக்கு 2 - 3 மில்லியன் டன் அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்று வர்த்தகத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நவம்பரில் நமக்கு 94 மில்லின் டன் அரிசி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். நமக்கு தேவையோ 88 மில்லியன் டன் அரிசிதான். எனவே அப்போது நம்மிடம் 6 மில்லியன் டன் வரை அரிசி கூடுதலாக இருக்கும். அதில் 2 - 3 மில்லியன் டன் அரிசியை ஆப்ரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதிக்கும் என்று சொல்லப்படுகிறது.

நன்றி : தினமலர்



No comments: