Tuesday, August 26, 2008

சிறிது உயர்ந்து முடிந்தது பங்கு சந்தை

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே சென்செக்ஸ் குறைந்துகொண்டுதான் இருந்தது. மாலை வர்த்தகம் முடிய 10 நிமிடங்கள் இருக்கும் வரை இதே நிலைதான் நீடித்தது. ஆனால் கடைசி 10 நிமிடங்களில் இழந்த புள்ளிகள் மீட்கப்பட்டு, நேற்றைய நிலையில் இருந்து கொஞ்சம் உயர்ந்து சந்தை முடிவடைந்தது. மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 31.87 புள்ளிகள் மட்டும் ( 0.22 சதவீதம் ) உயர்ந்து 14,482.22 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 2.15 புள்ளிகள் மட்டும் ( 0.05 சதவீதம் ) உயர்ந்து 4,337.50 புள்ளிகளில் முடிந்தது. பேங்கிங், கேப்பிடல் குட்ஸ், பவர், சிமென்ட் மற்றும் குறிப்பிட்ட சில டெக்னாலஜி துறை பங்குகளை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டினர். ஹெச்.டி.எஃப்.சி., வங்கி 3.92 சதவீதம், சத்யம் 3.25 சதவீதம், ஹெச்.சி.எல்.,டெக் 2.77 சதவீதம், விப்ரோ 2.25 சதவீதம், பெல் 1.96 சதவீதம் உயர்ந்திருந்தது.

நன்றி : தினமலர்


No comments: