Tuesday, December 15, 2009

தேசம் விலை​போ​கி​றதே...!

அது மன்​ன​ராட்சி ஆனா​லும்,​​ மக்​க​ளாட்சி ஆனா​லும்,​​ ஏன் சர்​வா​தி​கார ஆட்​சியே ஆனா​லும் அந்த நாட்​டை​யும்,​​ மக்​க​ளை​யும்,​​ அவர்​க​ளது நல​னை​யும் பாது​காப்​ப​து​தான் அடிப்​ப​டைக் கடமை.​ நல்ல பல திட்​டங்​க​ளின் மூலம் மக்​க​ளது நல்​வாழ்​வுக்கு ஓர் அரசு உத்​த​ரவு தரு​கி​றதோ இல்​லையோ,​​ அன்​னி​யர்​கள் தேசத்தை ஆக்​கி​ர​மிக்​கா​மல் பாது​காப்​ப​தும்,​​ சுரண்​டா​மல் பார்த்​துக் கொள்​வ​தும் எந்த ஓர் அர​சுக்​கும் அடிப்​ப​டைக் கடமை.​ இந்த அடிப்​ப​டைக் கட​மை​யைக்​கூட மத்​திய ஆட்​சி​யில் இருக்​கும் ஐக்​கிய முற்​போக்​குக் கூட்​டணி செய்​யத் தவ​று​கி​றதோ என்​கிற ஐயப்​பாடு சமீ​ப​கா​ல​மா​கத் தோன்​றி​யி​ருக்​கி​றது.​

இந்​தியா மிகப்​பெ​ரிய மின் பற்​றாக்​கு​றை​யைச் சந்​திக்க இருக்​கி​றது என்​பதை யாரும் மறுக்​க​வில்லை.​ இந்​தி​யா​வின் எரி​சக்​தித் தேவையை எப்​படி எதிர்​கொள்​வது என்​ப​தில் அனை​வ​ரும் கைகோர்த்து,​​ நாளைய தலை​மு​றை​யி​ன​ரின் நல​னை​யும் கருத்​தில்​கொண்டு செயல்​பட வேண்​டும் என்​ப​தி​லும் இரு​வேறு கருத்து இருக்க முடி​யாது.​ இந்​தப் பிரச்​னை​யில் மக்​கள் கருத்தை முறை​யா​கக் கணிக்​கா​ம​லும்,​​ பொது​வான அணு​கு​மு​றை​யைக் கடைப்​பி​டிக்​கா​ம​லும் அமெ​ரிக்​கா​வு​டன் பல்​வேறு சம​ர​சங்​க​ளைச் செய்​து​கொண்டு அணு​சக்தி ஒப்​பந்​தம் செய்து கொண்​டது இந்​திய அரசு.​

அது​வும் போதா​தென்று,​​ இந்​தி​யா​வின் உரி​மை​களை அடகு வைக்​கும்,​​ நாளைய தலை​மு​றை​யி​ன​ரின் நியா​ய​மான பாது​காப்பை நிர்​மூ​ல​மாக்​கும் ஒரு நட​வ​டிக்​கை​யி​லும் இப்​போது மன்​மோ​கன் சிங் தலை​மை​யி​லான அரசு இறங்கி இருப்​பது அதிர்ச்சி அளிக்​கி​றது.​

அது இந்​திய நிறு​வ​னமோ,​​ பன்​னாட்டு நிறு​வ​னமோ எது​வாக இருந்​தா​லும்,​​ தாங்​கள் தொழில் செய்து லாபம் சம்​பா​திப்​ப​தற்​கா​கச் சுற்​றுச்​சூ​ழ​லைப் பாதிப்​ப​தும்,​​ தொழி​லா​ளர்​கள் மற்​றும் அந்​தத் தொழிற்​சா​லை​யைச் சுற்றி வாழும் மக்​க​ளின் நல்​வாழ்​வுக்​கும்,​​ ஆரோக்​கி​யத்​துக்​கும் பாதிப்பு ஏற்​ப​டுத்​து​வ​தும் ஏற்​பு​டை​ய​தல்ல.​ நமது அர​சி​ய​ல​மைப்​புச் சட்​டம் 21-வது பிரி​வின்​படி வாழ்​வு​ரிமை என்​பது ஒவ்​வோர் இந்​தி​யக் குடி​ம​க​னுக்​கும் உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது.​

நமது உச்ச நீதி​மன்​றம் இந்​தப் பிரச்​னை​யில் மேலும் ஒரு​படி சென்று,​​ வாழும் உரிமை என்​பது உயி​ரு​டன் வாழ்​வது என்​பது மட்​டு​மல்ல,​​ சுய​ம​ரி​யா​தை​யு​டன் வாழ்​வது என்​ப​தும் அடிப்​ப​டைத் தேவை​க​ளான உண்ண உணவு,​​ உடுக்க உடை,​​ இருக்க வீடு இவை​க​ளு​டன் வாழ்​வது என்​ப​தும்​தான் என்று பல தீர்ப்​பு​க​ளின் மூலம் உறுதி செய்​தி​ருக்​கி​றது.​ அதை மேலும் விரி​வு​ப​டுத்தி,​​ மனித உரி​மை​யு​ட​னும்,​​ கௌ​ர​வத்​து​ட​னும் வாழ்​வது என்​பது,​​ பாது​காக்​கப்​பட்ட சுற்​றுச்​சூ​ழ​லு​ட​னும்,​​ நச்​சுக் கலப்​பில்​லாத காற்று மற்​றும் தண்​ணீ​ரு​ட​னும் வாழ்​வது என்​று​கூ​டத் தீர்ப்பு வழங்கி இருக்​கி​றது.​

உல​கி​லுள்ள ஏனைய அர​சி​ய​ல​மைப்​புச் சட்​டங்​களை எல்​லாம்​விட,​​ இந்​திய அர​சி​ய​ல​மைப்​புச் சட்​டம் சுற்​றுச்​சூ​ழ​லுக்கு மிக அதி​க​மான முன்​னு​ரி​மை​யும் முக்​கி​யத்​து​வ​மும் அளித்​தி​ருக்​கி​றது.​ இயற்​கைச் சூழ​லைப் பேணு​வது மற்​றும் அதி​க​ரிப்​பது என்​பதை அர​சி​யல் சட்​டப்​பி​ரிவு 51-அ,​​ அடிப்​படை உரி​மை​யா​கவே நமக்கு அளித்​தி​ருக்​கி​றது.​

உச்ச நீதி​மன்ற பல்​வேறு தீர்ப்​பு​கள் வலி​யு​றுத்​தும் கருத்து,​​ எந்த ஒரு தொழில் நிறு​வ​ன​மும் அத​னால் ஏற்​ப​டும் சுற்​றுச்​சூ​ழல் பாதிப்​பு​க​ளுக்கு முழுப் பொறுப்​பும் ஏற்​றாக வேண்​டும் என்​ப​தைத்​தான்.​ தங்​க​ளது ஊழி​யர்​க​ளுக்கு மட்​டு​மல்ல,​​ அந்த நிறு​வ​னத்​தின் கழி​வு​கள்,​​ வாயுக் கசி​வு​கள் மற்​றும் நச்​சுத்​தன்மை போன்​ற​வற்​றால் சுற்​றி​லும் வாழும் பொது​மக்​க​ளுக்​கும்,​​ உயி​ரி​னங்​க​ளுக்​கும் ஏற்​ப​டும் பாதிப்​பு​கள் அனைத்​துக்​கும்​கூட நிறு​வ​னம் பொறுப்​பேற்​றாக வேண்​டும்.​

சட்​ட​மும் அர​சி​யல் சட்​ட​மும் ஒரு​பு​றம் இருக்​கட்​டும்.​ தார்​மிக ரீதி​யா​கப் பார்த்​தா​லும்,​​ தாங்​கள் லாபம் கரு​திச் செய்​யும் தொழில் அடுத்​த​வ​ரைப் பாதிக்​கக்​கூ​டாது என்​ப​தும் அப்​ப​டிப் பாதிப்பு ஏற்​பட்​டால் அதற்​கான நஷ்ட ஈடும் பரி​கா​ர​மும் செய்ய வேண்​டும் என்​ப​தும் சட்​டம் இருந்​தா​லும் இல்​லா​விட்​டா​லும் மனித நாக​ரி​கம் ஏற்​றுக்​கொள்​ளும் கட​மை​யும்​கூட.​ நிலைமை இப்​படி இருக்​கும்​போது,​​ நமது மத்​திய அரசு விசித்​தி​ர​மான ஒரு சட்​டத்​தின் மூலம்,​​ அன்​னி​யப் பன்​னாட்டு நிறு​வ​னங்​க​ளின் நஷ்ட ஈட்​டுத் தொகைக்கு ஓர் உயர் வரம்பு விதித்து அவர்​க​ளுக்​குப் பாது​காப்பு அளிக்​கத் தயா​ராகி இருப்​ப​து​தான் வெட்​கக் கேடாக இருக்​கி​றது.​

அமெ​ரிக்​கா​வில் தொடங்கி ஏனைய பல வளர்ச்சி அடைந்த நாடு​க​ளு​டன் இந்​தியா கையெ​ழுத்​திட்ட அணு எரி​சக்தி ஒப்​பந்​தங்​க​ளுக்​குப் பிற​கும் அந்த நாட்டு நிறு​வ​னங்​கள் இன்​னும் அணு மின் நிலை​யங்​க​ளைத் தொடங்க ஆர்​வத்​து​டன் முன்​வ​ரா​தது ஏனாம் தெரி​யுமா?​ அந்த அணு மின் நிலை​யங்​க​ளில் ஒரு​வேளை கசிவு ஏற்​பட்டு அத​னால் பாதிப்பு ஏற்​பட்​டால்,​​ அதற்கு அந்​தப் பன்​னாட்டு நிறு​வ​னங்​கள் முழுப் பொறுப்பு ஏற்​றாக வேண்​டுமே என்​ப​தால் அவர்​கள் தயங்​கு​கி​றார்​க​ளாம்.​ எப்​படி இருக்​கி​றது கதை.​ அணு மின் நிலை​யங்​க​ளில் மின்​சா​ரம் உற்​பத்தி செய்து லாபம் அடைய மட்​டும்​தான் தயா​ராம்!​ ​

நமது இந்​திய அரசு உடனே என்ன செய்ய இருக்​கி​றது தெரி​யுமா?​ அணு​மின் எரி​சக்தி பாதிப்​புச் சட்​டம் ​(சிவில் நியூக்​ளி​யர் லயபி​லிட்டி பில்)​ என்​றொரு சட்​டம் இயற்றி,​​ இந்த அணு​மின் நிலை​யங்​க​ளால் பாதிப்பு ஏற்​பட்​டால் அந்த நிறு​வ​னங்​க​ளின் அதி​க​பட்ச நஷ்ட ஈட்​டுத் தொகை 450 மில்​லி​யன் டாலர் என்று பாது​காப்​புத் தர முன்​வந்​தி​ருக்​கி​றது.​ அதற்கு மேலான பாதிப்​பு​க​ளுக்கு இந்​திய அரசே பொறுப்பு ஏற்​றுக் கொள்​ளு​மாம்.​

என்ன அயோக்​கி​யத்​த​னம் என்று யாரும் கேட்​டு​வி​டக் கூடாது.​ தேசப்​பற்​று​மிக்க ஓர் அரசு,​​ இந்​தி​யாவை ஓர் அமெ​ரிக்​கா​வாக மாற்​ற​வும்,​​ பன்​னாட்டு முத​லீ​டு​க​ளைப் பெறு​வ​தற்​கா​க​வும் இப்​படி ஒரு "சலுகை' அளிக்க இருக்​கி​றது.​ நாளைய தலை​மு​றை​யின் நல்​வாழ்வு முக்​கி​யமா,​​ இந்​திய மக்​க​ளின் பாது​காப்பு முக்​கி​யமா இல்லை பன்​னாட்டு முத​லீ​டும்,​​ ஆபத்​தான அணு மின்​சக்​தி​யும் முக்​கி​யமா?​

தேச​ந​லன் விலை​போ​கி​றது -​ ​ வியா​பா​ரி​க​ளால் அல்ல,​​ ஆட்​சி​யா​ளர்​க​ளால்!​ வந்தே மாத​ரம்!
நன்றி : தினமணி

No comments: