Saturday, December 19, 2009

2018ல் காசோலைக்கு கு‌ட்பை: பிரிட்டன் அரசு

வரும் 2018ம் ஆண்டு முதல், காசோலை பயன்பாடு முற்றிலும் நிறுத்தப் படும் என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு முறைகள் தற்போது அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக காசோலை பயன்படுத்தும் முறை சமீப காலமாக குறைந்து வருகிறது. மேலும், பணம் செலுத்தும் முறைகளில் நவீன மற்றும் திறன் மிக்க வழிமுறைகளை கையாள ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டு வருகின்றன. இதனால், காசோலை பயன்படுத்தும் முறை 2018ம் ஆண்டில் முற்றிலும் ஒழிக்கப் பட்டு விடும் என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கவுன்சிலின் தலைமை செயல் அதிகாரி பால் ஸ்மீ கூறுகையில், '21ம் நூற்றாண்டில் வளர்ந்துள்ள தொழில்நுட்ப சூழலில் பேப்பர் மூலம் பணம் செலுத்தும் முறையை விட பல திறன்மிக்க வசதிகள் சாத்தியப்படும் என்று கூறினார். மேலும், பொருளாதாரத் துறையின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு இது ஒரு வாய்ப்பு' என்றும் அவர் கூறினார்.
நன்றி : தினமலர்


No comments: