Saturday, October 24, 2009

பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர்கிறது

பெட்ரோல் விற்பனையாளர்களுக்கு அளிக்கப்படும் கமிஷன் தொகையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதுவரை பெட்ரோலுக்கு, ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.1028 கமிஷன் வழங்கப்படுகிறது. இனி அது ரூ.1098 ஆக உயர்த்தப்பட உள்ளது. இதேபோல் டீசலுக்கு தற்போது, ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.630 வழங்கப்படுகிறது. இனி அது ரூ.670 ஆக உயர்த்தப்பட உள்ளது. இதனால் பெட்ரோல் லிட்டருக்கு 7 காசும், டீசல் லிட்டருக்கு 4 காசும் அதிகரிக்கும். இந்த விலை உயர்வு நாடு முழுவதும் நுகர்வோரிடம் வசூலிக்கப்படும். இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர்


No comments: