Friday, October 16, 2009

இரட்டை வசதி கொண்ட ஸ்மார்ட்போன் தமிழகத்தில் அறிமுகம்

இரட்டை வசதி கொண்ட ஸ்மார்ட்போன் தமிழகத்தில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. ரிலையன்ஸ் வெப்ஸ்டோர் மற்றும் கூல்பேட் கம்யூனிகேஷன்ஸ் இணைந்து கூல்பேட் 2938 என்ற இரட்டை வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை தமிழகத்தில் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து ரிலையன்ஸ் வெப் ஸ்டோர் தமிழக பிரிவு தலைவர் கூறும்போது, சி.டி.எம்.ஏ., மற்றும் ஜி.எஸ்.எம்., தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இரண்டு மாடல் கூல்பேட் ஸ்மார்ட் போன்கள் அறிமுகப் படுத்தி உள்ளோம். இதன் விலை 10 ஆயிரத்து 999 ரூபாய். இதில் இரண்டு சிம்கார்டுகளை பயன்படுத்தும் வசதி உள்ளது. அதனுடன் டச் ஸ்கிரின் வசதியும் உண்டு. இதில், ஜி.எஸ்.எம் மற்றும் சி.டி.எம்.ஏ., ஆகிய இரண்டு தொழில்நுட்பத்தை மாற்றி மாற்றி பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவித்தார். மேலும், இன்னும் நான்கு மாடல் போன்களை வரும் மூன்று மாதங்களுக்குள் அறிமுகப்படுத்த உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமலர்


No comments: