Tuesday, August 11, 2009

பன்றிக்காய்ச்சல் நோய்க்கு தடுப்பு மருந்து தயாரிக்கும் முதல் இந்திய நிறுவனமாகிறது சி.பி.எல்

பன்றிக்காய்ச்சல் நோய்க்கு தடுப்பு மருந்து தயாரிக்கும் முதல் இந்திய நிறுவனமாகிறது சி,பி,எல் - கேடில்லா ஃபார்மாசிட்டிக்கல்ஸ் லிமிட்டெட்.. உலகையே உலுக்கியுள்ள பயங்கர தொற்று நோய் எச்1என்1 வைரஸ் நோய்(பன்றிக்காய்ச்சல்). இந்த நோய்க்கான தடுப்பு மருந்தை பல்வேறு மருந்து நிறுவனங்களும் போட்டாபோட்டியில் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் கேடில்லா நிறுவனம் அமெரிக்க மருந்து நிறுவனமான நோவாவாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்து தயாரித்துள்ளது. மருந்து குறித்த அறிக்கையை மத்திய அரசுக்கு இன்னும் ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்கிறது. மத்திய அரசு ஒப்புதல் கிடைத்த பிறகு, இந்தியாவில் இருக்கும் பன்றிக்காய்‌ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அளிக்கப்படும் என கேடில்லா ஃபார்மாசிட்டிக்கல்ஸ் சேர்மன் தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமலர்


No comments: