Thursday, August 20, 2009

மும்பை நரிமன் பாயின்ட் கட்டிடத்தை மாற்றுங்கள் : ஏர் இந்தியாவுக்கு பிரபுல்படேல் பரிந்துரை

2008 - 09 நிதி ஆண்டில் ரூ.5,000 கோடி நஷ்டம் அடைந்திருக்கும் ஏர் - இந்தியா, மும்பை நரிமன் பாயின்ட்டில் இருக்கும் அதன் தலைமை அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல் கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்தியாவிலேயே அதிக காஸ்ட்லியான பகுதியாக இருக்கும் மும்பை நரிமன் பாயின்ட் பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு அதன் தலைமையகத்தை மாற்றினால் பெருமளவு பணத்தை மிச்சப்படுத்த முடியும் என்றார் அவர். அங்கிருக்கும் 22 மாடிகளை கொண்ட ஏர் - இந்தியா கட்டிடத்தில் பெரும்பாலான தளங்கள் ஏற்கனவே வேறு நிறுவனங்களுக்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏர் இந்தியா நிறுவனம் அதற்கான சீப் ஆப்பரேட்டிங் அதிகாரியையும் தேடி வருவதாக தெரிவித்தார். சர்வதேச அளவில் இதற்காக விளம்பரமும் இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாகும் என தெரிவித்தார்.
நன்றி : தினமலர்

No comments: