Sunday, August 23, 2009

பி.எஸ்.என்.எல்., பிராட்பேண்ட் இணைப்பு கிடைக்காமல் அவதி

காரைக்குடி தொலைதொடர்பு மாவட்டத்தில், பி.எஸ்.என்.எல்., பிராட்பேண்ட் இணைப்பு பெற்றவர்களுக்கு, கடந்த ஒரு வாரமாக அடிக்கடி இணைப்பு சரிவர கிடைக்காமல், சந்தாதாரர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். காரைக்குடி பி.எஸ்.என்.எல்., தொலை தொடர்பு மாவட்டத்தின் கீழ் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில், மாத கட்டணம் 125 ரூபாய் முதல் 3,300 ரூபாய் திட்டத்தில் பிராட்பேண்ட் இணைப்புகளை சந்தாதாரர்கள் பெற்றுள்ளனர். காரைக்குடியில் மட்டும் 2,000 பேரும், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 6,500 பேர் இந்த இணைப்பு பெற்றுள்ளனர். கடந்த ஒரு வாரமாக இணைப்பு கிடைக்காமல் சந்தாரர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சந்தாதாரர்கள் புகார்: இது குறித்து சந்தாதாரர்கள் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் புகார் தெரிவித்தால் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதை சரிசெய்ய பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் முன்வரவேண்டும். உதவி பொது மேலாளர் ஒருவர் கூறுகையில், ''பொதுமேலாளர் விடுப்பில் சென்றுள்ளார். பெங்களூரு சர்வரில் எந்த பிரச்னையும் இல்லை. அந்தந்த உள்ளூர் டெலிபோன் நிலையத்தில் ஏதேனும் பிரச்னை இருக்கும். பிராட்பேண்ட் இணைப்பில் பிரச்னை குறித்து யாரும் புகார் தரவில்லை. போர்டில் 15,000 இணைப்புகள் வரை தருவதற்கு இடம் உள்ளது. இடப்பற்றாக்குறையால் இணைப்பு துண்டிக்க வாய்ப்பில்லை'' என்றார்.
நன்றி : தினமலர்


No comments: