Friday, August 28, 2009

ஏ.டி.எம்., கட்டுப்பாடுகள் அக்., 15ல் அமல்

வங்கிக் கணக்கு இல்லாத பிற ஏ.டி.எம்., களை, வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு ஐந்து முறைக்கு மேல் பயன்படுத்தினால், அதற்கு சேவை கட்டணம் வசூலிக்கும் திட்டம், அக்டோபர் மாதம் 15ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. வாடிக்கையாளர்கள் பணம் எடுத்தல் மற்றும் கணக்கில் உள்ள பணத்தை அறிய பிற வங்கி ஏ.டி.எம்.,களைப் பயன்படுத்தும் போது, அதனால், அந்த வங்கியின் சேவை பாதிக்கப்படுவதோடு, வாடிக்கையாளர் கணக்கு வைத்துள்ள வங்கி, பரிவர்த்தனை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
இதனால், வங்கியின் செலவினம் அதிகரிக்கிறது. இதைத் தவிர்க்க, பிற வங்கி ஏ.டி.எம்.,களை மாதத்திற்கு ஐந்து முறைக்கு மேல் பயன்படுத்துபவர்களிடம் சேவை கட்டணம் வசூலிக்கலாம் என, இந்திய வங்கிகள் சங்கம், ரிசர்வ் வங்கியிடம் பரிந்துரைத்தது. இதற்கு இந்திய ரிசர்வ் வங்கியும் ஒத்துக் கொண்டது. இந்தத் திட்டம், அக்டோபர் மாதம் 15ம் தேதி முதல் அமல்படுத் தப்பட உள்ளது. இந்தத் திட்டம் அமல்படுத்தப் பட்டால், மாதத்திற்கு ஐந்து தடவைக்கு மேல், பிற வங்கி ஏ.டி.எம்., களைப் பயன்படுத்தும் போது, வாடிக்கையாளர்களிடம், ஒரு தடவைக்கு 20 ரூபாய் சேவை கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த சேவை கட்டணம், எந்த வங்கியின் ஏ.டி.எம்., பயன்படுத்தப் பட்டதோ, அந்த வங்கிக்கு சென்றடையும்.

நன்றி : தினமலர்


No comments: