Friday, July 24, 2009

தொடர்ந்து இரண்டாவது நாளாக பங்கு சந்தையில் நல்ல வளர்ச்சி

தொடர்ந்து இரண்டாவது நாளாக பங்கு சந்தையில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. ஆட்டோ, ரியல் எஸ்டேட், மெட்டல் பங்குகளின் அபரிவிதமான வளர்ச்சி காரணமாக நிப்டி 4,550 புள்ளிகளுக்கு மேலேயே இருந்து வர்த்தகம் ஆனது. பவர், டெலிகாம், டெக்னாலஜி, கேப்பிடல் குட்ஸ் பங்குகளும் நல்ல வளர்ச்சி அடைந்திருந்தன. பட்ஜெட்டுக்குப்பின் ஏற்பட்ட இரண்டாவது வாராந்திர வளர்ச்சி இது. பொருளாதாரத்தில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக அமெரிக்க பங்கு சந்தையும் வியாழன் அன்று 2 - 2.5 சதவீத வளர்ச்சியை அடைந்திருந்தது. அதே போல ஐரோப்பிய சந்தைகள் 0.5 சதவீதமும், ஆசிய சந்தைகள் 0.4 - 2 சதவீத வளர்ச்சியை அடைந்திருந்தது. அவைகளின் வளர்ச்சியும் இந்திய சந்தை வளர்வதற்கு காரணமாக இருந்தன. மும்பை பங்கு சந்தையில் மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 147.92 புள்ளிகள் ( 0.97 சதவீதம் ) உயர்ந்து 15,378.96 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 44.80 புள்ளிகள் ( 0.99 சதவீதம் ) உயர்ந்து 4,568.55 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தின் போது அதிகப்படியான வளர்ச்சியை கண்டது மாருதி சுசுகி தான். இன்று அதிகப்படியாக அதன் பங்கு மதிப்பு ரூ.1,397.50 வரை சென்று பின்னர் ரூ.1,377.85 இல் முடிந்திருக்கிறது. இது 6.35 சதவீத வளர்ச்சி. நேற்று வெளிவந்த அதன் காலாண்டு நிதி அறிக்கையில், கடந்த வருடத்தை விட இந்த வருடம் 25.4 சதவீத கூடுதலான லாபம் சம்பாதித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக இன்று அதன் பங்குகள் அதிக வளர்ச்சியை அடைந்திருந்தது.
நன்றி :தினமலர்


No comments: