Thursday, July 9, 2009

ஏர் - இந்தியா சீரமைப்பு குழுவுக்கு தலைமை ஏற்க ரத்தன் டாடாவை அனுகிய மத்திய அரசு

கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கும் ஏர் - இந்தியாவின் நிர்வாகத்தை சீரமைத்து, அதை நெருக்கடியில் இருந்து காப்பாற்ற ஒரு ஆலோசனை குழுவை ( அட்வைசரி போர்டு ) மத்திய அரசு நியமிக்கிறது. அந்த குழுவுக்கு பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவை தலைமை ஏற்குமாறு கேட்டிருக்கிறது. இதுகுறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல் ரத்தன் டாடாடை சமீபத்தில் சந்தித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மத்திய அமைச்சரின் கோரிக்கையை ரத்தன் டாடா ஏற்றுக்கொண்டாரா என்று தெரியவில்லை. இந்நிலையில், ஏர் - இந்தியா நிறுவனம், அது குத்தகைக்கு வாங்கியிருக்கும் விமானங்களை கூடிய விரைவில் திருப்பி கொடுத்து விட முடிவு செய்திருக்கிறது. அதற்கான வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் தெரிகிறது. அதற்காக ஒரு குழுவை நியமித்து குத்தகை ஒப்பந்தம் குறித்து ஆராய்ந்து, இன்னும் ஒரு வாரத்திற்குள் குத்தகை விமானங்களை எல்லாம் திருப்பி கொடுத்து விட தீர்மானித்திருக்கிறது. மேலும் ஏர் - இந்தியாவின் விமானங்கள் செல்லாத வெளிநாடுகளில் இருக்கும் ஏர் - இந்தியா அலுவலகங்களை மூடி விடவும் தீர்மானித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: