Monday, July 27, 2009

கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 68.44 டாலராக உயர்ந்தது

மோசமான நிலையில் இருந்த உலக பொருளாதாரம் அதிலிருந்து மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தெரிவதால் ஆசிய சந்தையில் இன்று கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது. அமெரிக்காவில் உள்ள பெரிய நிறுவனங்கள் வெளியிட்ட காலாண்டு நிதி அறிக்கையில், அவைகள் லாபம் சம்பாதித்திருப்து தெரிய வந்திருப்பதை அடுத்து, கடந்த ஒரு வருட காலமாக உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவை ஆட்டிப்படைத்து வந்த பொருளாதார மந்த நிலை, முடிவுக்கு வந்து விடும் என்று தெரிகிறது. இதன் காரணமாக பெட்ரோலிய பொருட்களுக்கான டிமாண்ட் மீண்டும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. நியுயார்க்கின் முக்கிய வியாபார பொருளான யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் ( செப்டம்பர் டெலிவரிக்கானது ) விலை பேரலுக்கு 39 சென்ட் உயர்ந்து 68.44 டாலராக இருக்கிறது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை 38 சென்ட் உயர்ந்து 70.70 டாலராக இருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: