Friday, June 26, 2009

இன்போசிஸ் துணை தலைவர் நந்தன் நிலேகனி ராஜினாமா ; மத்திய அரசு பணியில் சேர்ந்தார்

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான இன்போசிஸில் துணை தலைவராக இருப்பவர் நந்தன் நிலேகனி. அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு, பிரதமர் மன்மோகன் சிங்கின் அழைப்பை ஏற்று மத்திய அமைச்சருக்கு நிகரான பதவியில் சேர்ந்திருக்கிறார். இந்திய குடிமக்களுக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்கும் பணியை மத்திய அரசு துவங்கியுள்ளது. அதற்காக அமைக்கப்பட்டிருக்கும் ஆணையத்தின் தலைவராக நிலேகனி நியமிக்கப்பட்டிருக்கிறார். இன்போசிஸ் நிறுவனம் துவக்கப்பட காரணமானவர்களில் ஒருவரான நந்தன் நிலேகனி, அதன் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்தார். 2007ல் அந்த நிறுவனத்தின் துணை தலைவரான பின், நிர்வாகத்தில் தலையிடாமல் இருந்தார். 21 பில்லியன் டாலர்கள் சந்தை மதிப்புடைய இன்போசிஸ் வெளியிட்ட அறிக்கையில் இந்த விபரங்கள் சொல்லப்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: