Saturday, June 27, 2009

உலகம் இதுவரை பார்த்திராத வகையில் மைக்கேல் ஜாக்ஸனின் சவ ஊர்வலம் இருக்குமாம்

இளவரசி டயனாவுக்கு அடுத்ததாக, உலகம் இதுவரை பார்த்திராத வகையில், அதிகம் பேர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாக, மைக்கேல் ஜாக்ஸனின் சவ ஊர்வலம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. உலகம் முழுவதிலம் உள்ள அவரது லட்சக்கணக்கான ரசிகர்களும், டி.வி.பார்வையாளர்களும் அதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இளவரசி டயனாவின் சவ ஊர்வலத்தில் தான் அதிகம் பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள. 12 வருடங்களுக்கு முன் இறந்த டயனாவின் சவ ஊர்வலத்தில் கலந்து கொள்ள, சுமார் 2,50,000 பேர் ஹைடல் பார்க்கில் மட்டும் கூடி இருந்தார்கள். இது தவிர பிரபல அமெரிக்க பாடகர் எல்விஸ் பிரஸ்லே 1977 ல் இறந்தபோது 75,000 ரசிகர்கள் கூடியிருந்தார்கள். ருடால்ப் வேலன்டினோ என்ற அமெரிக்க நடிகர் 1926 ல் இறந்தபோது 40,000 பேர் கூடியிருந்ததாக சொல்லப்படுகிறது. இப்போது மைக்கேல் ஜாக்ஸனின் சவ ஊர்வலத்தில் டயனாவுக்கு அடுத்ததாக அதிகம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை மைக்கேல் ஜாக்ஸனின் சவ அடக்கத்தை குடும்ப நிகழ்ச்சியாக நடத்த தீர்மானித்தாலும் கூட ரசிகர்களின் வருகையை கட்டுப்படுத்த முடியாத நிலை தோன்றும் என்கிறார்கள். மேலும் மைக்கேல் ஜாக்ஸன் ரகசியமாக முஸ்லிமாக மாறி விட்டார் என்றும் கூறப்படுகிறது. அப்படி அவர் முஸ்லீம் முறையில் அடக்கம் செய்யப்பட இருந்தால், இறந்த இரு நாட்களுக்குள் அடக்கம் செய்யப்பட வேண்டுமாம். அதற்கு வாய்ப்பு இல்லை. இன்னொரு செய்தியும் வெளிவருகிறது. அவரது உடல் அடக்கம் செய்யப்படாமல், பாடம் செய்யப்பட்டு பாதுகாக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
நன்றி : தினமலர்


No comments: