Monday, June 29, 2009

லேசான ஏற்றத்துடன் முடிந்த பங்கு சந்தை

வெள்ளி அன்று 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்திருந்த பங்கு சந்தை இன்று லேசான ஏற்றத்துடன் முடிந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் ஆயில் அண்ட் கேஸ், மெட்டல், ரியல் எஸ்டேட், பேங்கிங் ( ஐசிஐசிஐ நீங்கலாக ), குறிப்பிட்ட இன்ஃப்ராஸ்டரக்சர் கம்பெனிகள் நல்ல லாபம் பார்த்தன. அதே நேரம் ஹெச்டிஎஃப்சி, டாடா மோட்டார்ஸ், சுஸ்லான், சன் பார்மா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ஐடிசி, ஐடியா, டாடா பவர், ஹீரோ ஹோண்டா போன்ற நிறுவன பங்குகள் அதிகம் விற்கப்பட்டன. காலையில் இருந்தே ஏற்றத்தில் இருந்த சந்தையில் மாலை வர்த்தகம் முடியும் போது, மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 21.10 புள்ளிகள் ( 0.14 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 14,785.74 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 15.45 புள்ளிகள் ( 0.35 சதவீதம் ) உயர்ந்து 4,390.95 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: