Tuesday, June 30, 2009

கச்சா எண்ணெய் விலை 72 டாலருக்கும் மேல் உயர்ந்தது

உலகின் எட்டாவது மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடான நைஜீரியாவில், அடிக்கடி ஆயில் உற்பத்தி நிலையங்களில் இருந்து வரும் பைப்லைன்களை மற்றும் பிளாட்பாரத்தை தீவிரவாதிகள் சேதப்படுத்தி விடுவார்கள். இதனால் எண்ணெய் கம்பெனிகளுக்கு கோடிக்கணக்கான டாலர்கள் நஷ்டம் ஏற்படுவதுடன் உற்பத்தியும் பாதிக்கப்படுவது வழக்கம். இப்போது அம்மாதிரியான பிரச்னை மீண்டும் எழுந்துள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 72 டாலருக்கும் மேல் உயர்ந்து விட்டது. அமெரிக்காவின் யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 1.08 டாலர் அதிகரித்து 72.57 டாலராக இருக்கிறது. லண்டனின் பிரன்ட் நார்த்ஸீ குரூட் ஆயில் விலை 1.21 டாலர் அதிகரித்து 72.20 டாலராக இருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: