Wednesday, June 24, 2009

பங்கு சந்தையில் ரூ.50,000 கோடியை முதலீடு செய்ய எல்.ஐ.சி.,திட்டம்

பங்கு சந்தையில் ரூ.50,000 கோடியை இந்த நிதி ஆண்டில் முதலீடு செய்ய எல்.ஐ.சி.,ஆஃப் இந்தியா திட்டமிட்டிருக்கிறது. கடந்த வருடம் நாங்கள் ரூ.40,800 கோடியை பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்தோம். இந்த வருடம் ரூ.50,000 கோடியை முதலீடு செய்ய இருக்கிறோம் என்றார் எல்.ஐ.சி.,யின் மேலாண் இயக்குனர் தாமஸ் மேத்யூ. இந்த நிதி ஆண்டில் இதுவரையிலும் எல்.ஐ.சி., ரூ.8,000 கோடியை பங்கு சந்தையில் முதலீடு செய்திருக்கிறது. இது தவிர அரசுத்துறை பத்திரங்களிலும், கார்பரேட் கடன் பத்திரங்களிலும் எல்.ஐ.சி., முதலீடு செய்திருக்கிறது. நேற்று எல்.ஐ.சி.,யின் சேர்மன் விஜயன் இது குறித்து பேசியபோது, இந்த நிதி ஆண்டில் நாங்கள் 20 சதவீத கூடுதல் பிரீமியம் வருவாயை எதிர்பார்க் கிறோம். புது பிரீமியம் மூலம் கிடைக்கும் வருவாயை பொறுத்தவரை, 2008 - 09 நிதி ஆண்டில் 10 சதவீதம் குறைந்திருந்தது. அது இந்த நிதி ஆண்டில் 25 சதவீதம் உயரும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். 2008 - 09 நிதி ஆண்டில் எல்.ஐ.சி.,பிரீமியம் வருவாயாக ரூ.1,55,000 கோடியை பெற்றிருந்தது. அதில் புது பிரீமியம் வருவாய் ரூ.52,000 கோடியும் அடங்கும்.
நன்றி :தினமலர்


No comments: