Tuesday, June 23, 2009

ஏர் - இந்தியா ஊழியர்களுக்கான சம்பளத்தில் 17 சதவீதம் குறைக்கப்படுகிறது

நாள் ஒன்றுக்கு ரூ.15 கோடி வரை நஷ்டம் அடைந்து வரும் ஏர் - இந்தியா நிறுவனம், செலவை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊழியர்களுக்கான ஜூன் மாத சம்பளத்தை, ஜூன் கடைசி தேதிக்கு பதிலாக ஜூலை 15 ம் தேதி கொடுப்பதாக அறிவித்தது. பின்னர் அதன் உயர் அதிகாரிகள் எல்லோரும் ஜூலை மாதத்தில் சம்பளம் மற்றும் ஊக்கத்தொகை இல்லாமல் வேலை பாருங்கள் என்றது. இப்போது மூன்றாவதாக ஊழியர்களுக்கு செலவு செய்து வந்த வருடாந்தர தொகையில் 17 சதவீதத்தை அல்லது ரூ.500 கோடியை குறைக்க முடிவு செய்திருக்கிறது. அதற்காக ஒரு கமிட்டியை நியமனம் செய்திருக்கிறது. இப்போது அந்த நிறுவனத்தில் 31,000 பேர் வேலை பார்க்கிறார்கள். அவர்களுக்கு வருடந்தோறும் சம்பளம் மற்றும் மற்ற வசதிகளுக்கான தொகையாக ரூ.3,000 கோடி செலவு செய்யப்படுகிறது. இதிலிருந்து ரூ.500 கோடியை குறைத்து ரூ.2,500 கோடியாக மாற்ற முயற்றிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நான்கு பேரை கொண்ட அந்த கமிட்டி, ஊழியர்களுக்கும் ஏர் - இந்தியா நிர்வாகத்துக்கு மிடையே போடப்பட்டிருக்கும் சம்பளம் குறித்த ஒப்பந்தத்தை ஆராய்ந்து கொண்டிருக்கிறது.ற அந்த குழுவில் மனித வள மேம்பாட்டு துறையை சேர்ந்தவர்களும் நிதித்துறையை சேர்ந்தவர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். இப்போது ஏர் - இந்தியாவின் மொத்த நிர்வாக செலவில் 35 சதவீதம், ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் மற்ற வசதிகளுக்காகவே செலவு செய்யப்பட்டு வருகிறது. இதனை மாற்றி அமைப்பது குறித்து அந்த குழு ஆராய்ந்து, ஜூலை 15ம் தேதிக்கும் அறிக்கை தாக்கல் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: