Monday, June 8, 2009

அப்பல்லோ ஹெல்த் சிட்டிரூ. 150 கோடியில் விரிவாக்கம்

அப்பல்லோ மருத்துவமனை குழுமம், ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ ஹெல்த் சிட்டி மருத்துவமனையை 150 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவுபடுத்துகிறது. இது தொடர்பான அறிவிப்பை, மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் ரெட்டி அறிவித்துள்ளார்.இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 7,500 படுக்கை வசதிகளுடன் கூடிய 43 மருத்துவ
மனைகளை அப்பல்லோ குழுமம் நடத்தி வருகிறது. நாட்டின் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றாக திகழும் இம்மருத்துவமனை குழுமம், ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ ஹெல்த் சிட்டி மருத்துவமனையை 150 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவுபடுத்த உள்ளதாக அதன் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.விரிவுபடுத்தப்படும் வளாகத்தில், பல்வேறு நோய்களுக்கான நவீன மருத்துவப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட உள்ளன. புற்றுநோய்க்கு அளிக்கப்படும் ரேடியோ சர்ஜரி பிரிவு, முழங்கால் தொடர்பான நோய்களுக்கான பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் அமைக்கப்படுகின்றன. சர்வதேச அளவில் திறமைவாய்ந்த எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர்களைக்கொண்டு, மிகத் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.அழகுக் கலை மற்றும் உடல் அழகுபடுத்துவதற்கான சிகிச்சையில், சர்வதேச அளவில் சிறந்த அனுபவம் பெற்றவர்களைக்கொண்டு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இதுபோல் பல்வேறு நவீன மருத்துவ சிகிச்சைகளை, விரிவுபடுத்தப்படும் திட்டத்தின் மூலம் செயல்படுத்துவதற்கு அப்பல்லோ மருத்துவக் குழுமம் திட்டமிட்டுள்ளது.
நன்றி : தினமலர்


No comments: