Saturday, April 18, 2009

தாலிபான்களில் ரேடியோ ஸ்டேஷன், வெப்சைட்களை செயல் இழக்க செய்ய அமெரிக்கா முயற்சி

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல் தீவிரமடைந் திருப்பதை அடுத்து, அந்த இரு நாடுகளிலும் தாலிபான்களின் ரேடியோ ஸ்டேஷன் மற்றும் வெப்சைட்களை செயல் இழக்க செய்ய அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்த இரு நாடுகளிலும், தாலிபான் தீவிரவாதிகளால் லைசன்ஸ் பெறாமல் நடத்தப்படும் ரேடியோ ஸ்டேஷன் மூலமாகவும் வெப்சைட்கள் மூலமாகவும்தான் அவர்கள் பொதுமக்களுக்கு மிரட்டல் விடுவது, பயமுறுத்துவது போன்ற வேலைகளை செய்து வருகிறார்கள். மேலும் அவர்களுக்குள் தகவல்களை பரிமாறிக்கொள்ளவும் இவைகளை பயன்படுத்துகிறார்கள். தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு இந்த சாதனங்கள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாலேயே அவர்களால் எளிதாக தீவிரவாத செயல்களில் ஈடுபட முடிகிறது என்று அமெரிக்கா கருதுகிறது. எனவே இவைகளை செயல் இழக்க செய்ய அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அமெரிக்க ராணுவம் மற்றும் புலனாய்வுத்துறை இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தி வருவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பாகிஸ்தானிய வெப்சைட்கள் மற்றும் சாட்டிங் ரூம்களில் அடிக்கடி வெளியிடப்படும் வீடியோக்கள், தீவிரவாத செயலை நியாயப்படுத்தும் விதமாகவும் மக்களை கோபமூட்டும் விதமாகவும் அமைந்திருப்பதால், அவைகளையும் முடக்க அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.
நன்றி : தினமலர்


No comments: