Sunday, April 12, 2009

பந்தய குதிரை போல் பாய்கிறது பங்குச்சந்தை

கடந்த மூன்று வாரங்களாக வெள்ளியன்று பங்குச்சந்தை விடுமுறை காரணமாக வர்த்தகம் நடப்பதில்லை. வியாழன் மட்டுமே வர்த்தகம் நடக்கிறது. இந்த வாரமும் அப்படித் தான் இருந்தது.சமீபகாலமாக ஏறிக்கொண்டே செல்லும் பங்குச்சந்தைக்கு வியாழன் மட்டும் விதிவிலக்கா என்ன? வியாழனன்று வெளியான பிப்ரவரி மாத தொழில் துறை உற்பத்தி புள்ளிவிவரம் ஜனவரியை விட குறைவாக இருந்தும், சந்தை மேலே சென்றது, ஏன்? இது போல குறையும் என்றும் முன்னமேயே எதிர்பார்த்திருந்ததால் சந்தையில் அதிகம் மாற்றங்கள் இல்லை.இருந்தாலும், காலையில் 182 புள்ளிகள் வரை மேலே சென்ற சந்தை, பின் அவ்வளவு லாபத்தையும் இழந்து ஒரு கட்டத்தில் 95 புள்ளிகள் வரை கீழேயும் சென்றது.பின் சுதாரித்து 62 புள்ளிகள் கூடி முடிவடைந்தது. வெளிநாட்டு, உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 171 கோடி ரூபாய் அளவிற்கு பங்குகளை வாங்கின.பணவீக்கம் இந்த வாரம் 0.26 சதவீதமாகக் குறைந்தது. அதனால், வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி இன்னும் குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் வங்கிப் பங்குகள் மேலே சென்றன. கடந்த பல வாரங்களாகவே டிபாசிட்களின் வட்டி விகிதங்கள் குறையும் என்று கூறி வந்தோம்.அது போலவே தற்போது ஸ்டேட் பாங்க் தனது வட்டி விகிதங்களை 0.50 சதவீதம் அளவு குறைத்துள்ளது. சத்யம் கம்பெனியின் நஷ்டம் கணக்கெடுத்துப் பார்த்ததில் 6,000 கோடி ரூபாய் அளவு இருக்கும் என தீர்மானித்திருக்கின்றனர்.இதில், அதிகம் லாபமடைந்தது ராஜு குடும்பத்தினர் (2,580 கோடி). அதிகம் நஷ்டமடைந்தது யார் தெரியுமா? எல்.ஐ.சி., (950 கோடி). தற்போது சத்யத்தை வாங்க காக்னிசன்ட் கம்பெனியும் போட்டியில் இருக்கிறது. அடுத்த வாரத்திற்குள் முடிவு தெரிந்து விடும்.வார இறுதியில் மும்பை பங்குச்சந்தை 62 புள்ளிகள் குறைந்து, 10 ஆயிரத்து 804 புள்ளிகளில் முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தை எந்தவிதமான மாற்றமும் இல்லாமல், 3,342 புள்ளிகளில் முடிவடைந்தது.முதலீட்டாளர்களின் ஒரு மாத லாபம்சந்தை முன்னேறிச் செல்லும் வேகத்தில் முதலீட்டாளர்கள் கடந்த ஒரு மாதத்தில் அடைந்த லாபம் மட்டும் ஏழு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய். கம்பெனிகள் படி பார்த்தால் ரிலையன்ஸ் மற்றும் ஓ.என்.சி.ஜி., ஆகியவை அதிகம் முன்னேறியுள்ளன. மும்பை பங்குச் சந்தையின் தற்போதைய குறியீடான 10804, கடந்த ஆறு மாத காலத்தில் அதிகபட்சம்.இது காலாண்டு முடிவுகளின் சீசன். பெரிய கம்பெனிகள் என்று பார்க்கப் போனால், என்.டி.பி.சி.,யின் முடிவுகள் வந்துள்ளன. சென்ற ஆண்டு லாபத்தை விட 5.56 சதவீதம் கூடி, 7,827 கோடி ரூபாய் லாபம் இந்த ஆண்டில் சம்பாதித்துள்ளது.சந்தை 10 ஆயிரத்தையும் தாண்டி பந்தயக் குதிரை போலத் தான் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், காலாண்டு முடிவுகள் சந்தையை கீழே தள்ளிவிடாமல் இருக்க வேண்டும்.
-சேதுராமன் சாத்தப்பன்
நன்றி : தினமலர்


1 comment:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்