நன்றி : தினமலர்
Wednesday, April 29, 2009
பி.பி.ஓ.வேலைக்காக 8,000 பேரை வேலைக்கு எடுக்கும் விப்ரோ டெக்னாலஜிஸ்
விப்ரோ டெக்னாலஜிஸ் நிறுவனம், அதன் பி.பி.ஓ.,பிரிவுக்கு, இந்த நிதி ஆண்டுக்குள் 8,000 பேரை வேலைக்கு எடுக்க முடிவு செய்திருக்கிறது. இந்த 8,000 பேரில் 1,300 பேர், ஐதராபாத்தில் 30 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் அதன் அலுவலகத்தில் வேலையில் சேர்த்துக்கொள்ளப்பட இருக்கிறார்கள். ஏற்கனவே அங்கு 3,150 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். ஆனால் அங்கு 22,000 பேர் வேலை பார்க்க முடியும். 70 வாடிக்கையாளர் களுக்கு தேவையான வேலைகளை இங்குள்ள பி.பி.ஓ., அலுவலகத்தில் செய்து கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இது குறித்து பத்திரிக்கையாளர்களிடையே பேசிய விப்ரோ பி.பி.ஓ., நிறுவனத்தின் தலைமை அதிகாரி அசுதோஷ் வைத்யா, நாங்கள் எங்களது பி.பி.ஓ., அலுவலகத்திற்கு பணியாளர்களை சேர்க்க ஆரம்பித்து விட்டோம். பெரிய நகரங்கள் மற்றும் டவுண்களில் இன்னும் இரண்டு வருடங்களுக்கு ஆட்களை தேர்ந்தெடுப்போம் என்றார். அங்கேயே அவர்களுக்கான கடிதம் கொடுக்கப்படும் என்றும் சொன்னார்.
Labels:
வேலை வாய்ப்பு
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
உங்களுடைய website பார்த்தனான் நல்ல இருக்குது
என்னுடைய website பெயரயும் உங்களுடைய websitil பதிவு செய்விர்களா இல்லை என்றால் மன்னிக்கவும்….. பதில் அனுப்பவும்(jery1@hotmail.co.uk)
அன்புடன் வீரன்
www.tamilseithekal.blogspot.com
Post a Comment