Thursday, March 26, 2009

இந்தியாவுக்கான விமான சேவையை பாதியாக குறைத்தது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

இந்தியாவுக்கான விமான சேவையை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பாதியாக குறைத்திருக்கிறது. வேறு எந்த விமான கம்பெனியும் இதுவரை இந்த அளவுக்கு விமான சேவையை குறைத்தது இல்லை. இந்தியாவுக்கு 100 விமானங்கள் வரை இயக்கிக்கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், கடந்த சில மாதங்களில் அதில் 54 விமானங்களை குறைத்திருக்கிறது. மேலும் ஐந்து நகரங்களுக்கு விமான சேவையை முற்றிலுமாக நிறுத்தியும் இருக்கிறது. முன்பு 11 இந்திய நகரங்களுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களை இயக்கிக்கொண்டிருந்தது. இப்போது 6 நகரங்களுக்கு மட்டுமே இயக்குகிறது. இது குறித்து தமிழ்நாடு மற்றும் கர்னாடகாவுக்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிர்வாகி சருகா விக்ரம - ஆதித்யா தெரிவித்தபோது, நாங்கள் லாபம் வராத ரூட்களில் விமான சேவையை நிறுத்தி விட முடிவு செய்தோம். அதனடிப்படை யில் தான் ஐந்து இந்திய நகரங்களுக்கு சேவையை நிறுத்த வேண்டியதாகி விட்டது என்றார். விமானங்களில் நிரம்பும் இருக்கைகள் எண்ணிக்கையும் 55 சதவீதம் குறைந்து, வாரத்திற்கு 2,000 ஆகி விட்டது. எனவே தான் நாங்களும் இப்போதுள்ள சூழ்நிலைக்கு தகுந்தபடி சேவையை குறைத்துக்கொண்டோம் என்றார்.
நன்றி ; தினமலர்


No comments: