Monday, March 2, 2009

74 சதவீத சவுதி அரேபிய கம்பெனிகள் புதிதாக வேலைக்கு ஆட்களை எடுப்பதை நிறுத்துகின்றன

74 சதவீத சவுதி அரேபிய கம்பெனிகள் புதிதாக வேலைக்கு ஆட்களை எடுப்பதை இன்னும் ஆறு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை காரணமாக, சவுதி அரேபியாவின் பிரதான தொழிலான கச்சா எண்ணெய் ஏற்றுமதி தொழிலும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே புதிதாக வேலைக்கு எடுக்கும் போக்கு இன்னும் ஆறு மாதங்களுக்கு நிறுத்தப்படுகிறது. எஸ்ஏபிபி என்ற வங்கி, சவுதி அரேபியாவை சேர்ந்த 765 கம்பெனிகளிடம் இது குறித்து எடுத்த கருத்து கணிப்பில் இந்த விபரம் தெரிய வந்திருக்கிறது. இப்போதுள்ள பொருளாதார சூழ்நிலையில், சவுதி அரேபியாவின் தொழில் வளர்ச்சி இன்னும் இரு காலாண்டுகளில் 42 சதவீதாக குறைந்துதான் இருக்கும் என்று பெரும்பாலான கம்பெனிகள் தெரிவிக்கின்றன. கொஞ்ச கம்பெனிகள் மட்டுமே வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்கின்றன. மற்ற அரபு நாடுகளுடன் ஒப்பிட்டால், பொருளாதார மந்த நிலையால் சவுதி அரேபியா அவ்வளவாக பாதிக்கப்படாமல் தான் இருந்தது.எனினும் மற்ற அரபு நாடுகளை விட சவுதி அரேபியா அதிக மக்கள் தொகை உள்ள நாடு என்பதால், அங்கு வேலையில்லாதோர் பிரச்னை இப்போது எழுந்துள்ளது என்கிறார்கள்.
நன்றி : தினமலர்


No comments: