Monday, March 23, 2009

ஏறியது பங்கு சந்தை : சென்செக்ஸ் 457 புள்ளிகள் உயர்ந்தது

பங்கு சந்தையில் இன்று நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 457.34 புள்ளிகள் ( 5.1 சதவீதம் ) உயர்ந்து 9,424.02 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 132.85 புள்ளிகள் ( 4.73 சதவீதம் ) உயர்ந்து 2,939.90 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தின் போது ஆயில் அண்ட் கேஸ், மெட்டல் மற்றும் பேங்கிங் பங்குகள் பெறுமளவில் வாங்கப்பட்டன. அமெரிக்க வங்கிகளில் இருக்கும் வராக்கடன்களை அமெரிக்க அரசே ஏற்றுக்கொள்ளும் திட்டம் ஒன்றை அந்நாட்டு நிதி அமைச்சர் டிம் கெய்த்னர் இன்று அறிவிப்பதாக இருப்பதால், அந்த எதிர்பார்ப்பை அடுத்து உலக அளவில் பங்கு சந்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது. ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ஓ.என்.ஜி.சி., என்.டி.பி.சி., பார்தி ஏர்டெல், எஸ்.பி.ஐ, ஹெச்.டி.எப்.சி, செய்ல், ஐசிஐசிஐ பேங்க், இன்போசிஸ், ஹெச்.டி.எப்.சி.பேங்க், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ஆகிய நிறுவன பங்குகள் விலை உயர்ந்திருந்தன. டி.எல்.எப். மற்றும் ஹெச்.சி.எல் டெக் ஆகிய இரு நிறுவன பங்குகள் மட்டுமே விலை குறைந்திருந்தன.
நான்றி : தினமலர்


No comments: