Wednesday, March 4, 2009

பொருளாதார சரிவுக்கு முன்பே 44 ஆயிரம் ஊழியர்களை வேலைநீக்கம் செய்த பொதுத்துறை நிறுவனங்கள்

சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார சரிவு செப்டம்பர் 2008ல் தான் இந்தியாவையும் பாதிக்க ஆரம்பித்தது. ஆனால் அதற்கு முன்பாகவே அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள் 44 ஆயிரம் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியிருப்பது தெரிய வந்திருக்கிறது. 48 வது பொதுத்துறை நிறுவனங்களின் ஆய்வறிக்கை 2007-08 ல் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 16.14 லட்சம்பேர் வேலைபார்த்து வந்த பொதுத்துறை நிறுவனங்களில், 2007 - 08 ல் 15.7 லட்சம் பேர் மட்டுமே வேலை பார்த்தது தெரிய வந்திருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களின் லாபம் ரூ.89,578 கோடியில் இருந்து ரூ.91,140 கோடியாக உயர்ந்திருந்த நிதி ஆண்டில்தான் ஊழியர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டிருக்கிறது. ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்ததற்கும் பொருளாதார சரிவுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது. ஏனென்றால் பொருளாதார சரிவால் ஏற்பட்ட பாதிப்பு செப்டம்பர் 2008க்கு பின்னர் தான் இந்தியாவில் தெரிய வந்தது. பொருளாதார மந்த நிலை காரணமாகவும் செப்டம்பர் - டிசம்பர் 2008 ல் சுமார் 5 லட்சம் ஊழியர்கள் வேலையை இழந்திருக்கிறார்கள்.
நன்றி : தினமலர்


No comments: