Wednesday, March 25, 2009

நோவார்டிஸ் ( இந்தியா ) நிறுவனத்தின் 39 சதவீத பங்குகளை வாங்குகிறது நோவார்டிஸ்

சுவிட்சர்லாந்தை சேர்ந்த மருந்து நிறுவனமான நோவார்டிஸ், அதன் இந்திய துணை நிறுவனமான நோவார்டிஸ் ( இந்தியா ) வின் 39 சதவீத பங்குகளை கூடுதலாக வாங்கிக்கொள்ள முன் வந்திருக்கிறது. பங்கு ஒன்றுக்கு ரூ.351 விலை வைத்து மொத்தம் ரூ.440 கோடிக்கு ( 87 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ) இதனை வாங்கிக் கொள்ள இருப்பதாக, மும்பை பங்கு சந்தையில் நோவார்டிஸ் ( இந்தியா ) தெரிவித்திருக்கிறது. இப்போது அதன் இந்திய நிறுவனத்தின் 50.9 சதவீத பங்குகளை வைத்திருக்கும் நோவார்டிஸ், இன்னும் 39 சதவீத பங்குகளை வாங்குவதன் மூலம் 90 சதவீத பங்குகளை கொண்ட நிறுவனமாகி விடும். மார்ச் 24 ம் தேதியில் ரூ.275.60 விலையில் இருந்த நோவார்டிஸ் ( இந்தியா ) வின் பங்குகளை 27 சதவீதம் பிரீமியம் வைத்து ரூ.351 க்கு வாங்கிக்கொள்ள நோவார்டிஸ் முன் வந்திருக்கிறது. சமீபத்தில் நோவார்டிஸ் ( இந்தியா ) வின் பங்கு மதிப்பு 19.99 சதவீதம் வரை உயர்ந்திருப்பதை அடுத்து அதன் 39 சதவீத பங்குகளை, அதன் தாய் நிறுவனமான நோவார்டிஸ் வாங்கிக்கொள்ள முன்வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
நன்றி :தினமலர்


No comments: