Monday, March 9, 2009

கோ ஏர் நிறுவனத்துடன் இணைப்பா : ஸ்பைஸ்ஜெட் ஏர்வேஸின் பங்குகள் 19 சதவீதம் உயர்வு

குறைந்த கட்டணத்தில் விமான சேவை அளித்து வரும் ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸின் பங்குகள் இன்று மதியம் வர்த்தகத்தின் போது 19 சதவீதம் வரை உயர்ந்திருந்தது. காரணம் என்னவென்றால் அது, இன்னொரு ஏர்லைன்ஸான வாடியா குரூப்பிற்கு சொந்தமான கோ ஏர் உடன் இணையப்போகிறது, அல்லது அதன் பெருமாபான்மை பங்குகளை வாங்கப்போகிறது என்று வெளியான தகவலால்தான். மும்பை பங்கு சந்தையில் கடந்த வெள்ளி அன்று இருந்த அதன் முடிவு விலையில் இருந்து இன்று மதிய வேளையில் அதன் பங்கு மதிப்பு 19.08 சதவீதம் வரை உயர்ந்திருந்தது. அதன் 12.05 லட்சம் பங்குகளை இன்று மதியம் வரை கைமாறியிருந்தன. இதற்கு காரணம் கோ ஏர் உடன் அது இணைய போகிறது அல்லது கோ ஏரின் பெரும்பான்மை பங்குகளை வாங்கப்போகிறது என்று வெளியான தகவலால்தான் என்கின்றனர் வர்த்தகர்கள். கோ ஏர் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஜே வாடியாவை, ஸ்பைஸ் ஜெட்டின் சி.இ.ஓ.,சஞ்சய் அகர்வால் கடந்த மாதம் சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

நன்றி : தினமலர்


No comments: