Wednesday, February 25, 2009

டாடா மோட்டார்ஸ், அசோக் லேலாண்ட் விலையை குறைக்கின்றன

இந்தியாவின் முன்னணி டிரக் தயாரிப்பாளர்களான டாடா மோட்டார்ஸ் மற்றும் அசோக் லேலாண்ட், டிரக் விலையை குறைப்பதாக அறிவித்திருக்கின்றன. உற்பத்தி வரி மற்றும் சேவை வரியை தலா 2 சதவீதம் குறைத்து நேற்று மத்திய அரசு அறிவித்ததை அடுத்து இந்த இரு நிறுவனங்களும் டிரக் விலையை குறைக்கின்றன. உற்பத்தி வரி குறைப்பால் எங்களுக்கு மிச்சமாகும் பணம் முழுவதையும் எங்களது வாடிக்கையாளர்களுக்கே கொடுத்து விட முடிவு செய்திருக்கிறோம் என்று அசோக் லேலாண்டின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இரு வாகன தயாரிப்பாளர்களும் ரூ.16,000 வரை விலையை குறைப்பார்கள் என்று தெரிகிறது. உற்பத்தி வரியை 10 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாகவும், சேவை வரியை 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகவும் மத்திய அரசு குறைத்திருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: